வேரிலிருந்து முடி கொட்டுவதை உடனடியாக நிறுத்தி, அதிவிரைவான அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற, இந்த தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்தாலே போதும்.

hair2
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு வேரிலிருந்தே முடி கொட்ட கூடிய பிரச்சினை இருக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி வேரிலிருந்து முடி கொட்டத் தொடங்கி விட்டால் தலையில் சீக்கிரமே வழுக்கை விழுந்து விடும். முடி உதிர்வை சில நாட்களிலேயே நிறுத்த, குழந்தைகள் ஆண்கள் பெண்கள் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய சுலபமான ஒரு தேங்காய் எண்ணெயை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தேங்காய் எண்ணெயை வாரத்தில் மூன்று நாட்கள் உங்களுடைய தலையில் தடவி வந்தால், மூன்றே மாதத்தில் அடர்த்தியான முடி வளர்ச்சியை காண முடியும்.

மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ஆக பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கற்றாழையை எடுத்து ஒரு சிறிய துண்டுக்கு உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த குறிப்புக்கு கருஞ்சீரகம் நமக்கு தேவை. தேங்காய் எண்ணெய் 50ml, அலோ வேரா ஜெல் – 3 டேபிள் ஸ்பூன், கருஞ்சீரகம் – 1 டேபிள்ஸ்பூன் இந்த அளவுகளில் எடுத்துக்கொண்டால் சரியாக இருக்கும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி இதோடு அலோ வேரா ஜெல், கருஞ்சீரகம் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடங்கள் தேங்காய் எண்ணெயில் ஜெல் மற்றும் கருஞ்சீரகம் நன்றாக கொதிக்கட்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இது இரண்டு மணி நேரம் நன்றாக ஆரட்டும்.

அதன் பின்பு ஒரு வடிகட்டியில் மூலம் வடிகட்டி தேங்காய் எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தலையில் தடவி வர வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலையில் தேய்த்துக் கொண்டாலும் சரி தான். இரவு முழுவதும் இந்த  எண்ணெயை தலையில் வைத்து விட்டு மறுநாள் காலை தலைக்கு குளித்து கொள்ளலாம். அப்படி இல்லை என்ற தலைக்கு குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக இந்த எண்ணெயை உங்களுடைய தலையின் மயிர்க்கால்களில் படவேண்டும். ஏதோ தேங்காய் எண்ணெய் வைத்தோம் என்று, அப்படியே மேலே வைத்துவிடக்கூடாது. மண்டையோட்டில் தேங்காய் எண்ணெயை நன்றாக படும்படி தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். சில பேருக்கு இந்த அலோ வேரா ஜெல் அப்படியே தலையில் போட்டால் தலைவலி சளி பிடிக்கும் அல்லவா. இப்படி தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலையில் அப்ளை செய்யும்போது எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் பாஸ்ட் ஆக உங்களுடைய முடி வளர வேண்டும் என்றால் இந்த குறிப்பு மிக மிக சுலபமான குறிப்பு. தயார் செய்த தேங்காய் எண்ணெயை எட்டிலிருந்து பத்து நாட்கள் வரைதான் வைத்து பயன்படுத்த முடியும். காரணம் அதில் அலோ வேரா ஜெலின் ஈரத்தன்மை கொஞ்சம் இருக்கும் அல்லவா. வாரத்திற்கு ஒரு முறை புதியதாக எண்ணெயை காய்ச்சி பயன்படுத்துங்கள். ட்ரை பண்ணி பாருங்க. மூன்று மாதத்தில் ரிசல்ட்டை கண்கூடாக காணமுடியும்.

- Advertisement -