தூங்கும்போது கூட உங்களுடைய முடி வளர்ந்து கொண்டே இருக்க, சாதம் வடித்த கஞ்சியை இப்படி பயன்படுத்துங்கள்.

hair22
- Advertisement -

நம்முடைய முடி உதிர்வு குறைந்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க 2 சுலபமான வழிகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சாதம் வடித்த கஞ்சி, அரிசி ஊறவைத்த தண்ணீர் இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் இந்த குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய தேவைக்கு ஏற்ப பின் சொல்லக்கூடிய இரண்டு குறிப்பில் எதை பின்பற்றி வேண்டுமென்றாலும் பயன்பெறலாம். இரண்டுமே முழுக்க முழுக்க இயற்கையான முறையில் இயற்கையான பொருட்களை சேர்த்து சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் தான்.

முதலில் சாதம் வடித்த கஞ்சியை வைத்து குறிப்பை பார்த்து விடுவோம். பொதுவாக இப்போது எல்லோர் வீட்டிலும் குக்கரில் சாதம் வைக்கக்கூடிய வழக்கம் இருக்கிறது. ஆனால் இந்த குறிப்புக்கு அரிசியை குண்டானில் போட்டு வேக வைத்து அதிலிருந்து கஞ்சியை வடித்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாதம் வடித்த அரிசி கஞ்சி சூடாக இருக்கும்போதே இதில் நாம் ஒரு பொருளை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய தலையில் பேன் பொடுகு அரிப்பு சுண்டு இப்படிப்பட்ட தொந்தரவுகள் இருந்தால், இந்த அரிசி வடித்த கஞ்சியில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை போட வேண்டும். அப்படி உங்களுடைய தலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் இந்த வேப்பிலைக்கு பதிலாக மருதாணி இலை, துளசி இலைகள், முருங்கை இலைகள், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை இப்படி எந்த இலையை வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான்.

ஆனால் வடிகஞ்சி சூடாக இருக்கும் போதே ஏதாவது ஒரு இலையை அந்த கஞ்சியில் போட்டு அப்படியே விட்டு விடுங்கள். (ஒருவேளை அந்த கஞ்சி சூடு ஆறி விட்டால் மீண்டும் சூடுபடுத்தி கூட அதில் இந்த இலைகளை போடலாம்.) அப்போதுதான் இலையில் இருக்கக்கூடிய எசன்ஸ் கஞ்சியில் இறங்கும். இந்தக் கஞ்சி நன்றாக ஆறிய பின்பு வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்களுடைய தலை முழுவதும் ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு கூட ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளலாம். (இரவு முழுவதும் இந்த கஞ்சியை தலையில் ஊறவைத்து மறுநாள் கூட தலை குளிக்கலாம்.) வாரத்தில் இரண்டு நாள் இந்தக் குறிப்பை பயன்படுத்தலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக அரிசி ஊறவைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் கொஞ்சமாக விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் இதை 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த தண்ணீரை உங்களுடைய தலைமுடியில் ஸ்பிரே செய்து நன்றாக மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து பின் ஷாம்பு போட்டு தலையை நன்றாக அலசிக் கொள்ளலாம். (இதையும் உங்கள் விருப்பம் போல இரவு தலையில் ஸ்ப்ரே செய்து விட்டு, மறுநாள் காலை எழுந்து தலைக்கு குளித்தாலும் தவறு கிடையாது.)

இந்த இரண்டு குறிப்புகளில் உங்களுக்கு எது சவுகரியமாக உள்ளதோ அதை நீங்கள் பின்பற்றி பாருங்கள். இந்த குறிப்புகளை தொடர்ந்து பின்பற்ற உங்களுடைய முடி பிரச்சனைக்கு சீக்கிரம் நல்லதொரு தீர்வு கிடைக்கும். முடி உதிர்வு குறைந்து, முடி அடர்த்தியாக வளர செலவில்லாத இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -