முகம் எப்போதும் இளமையாக இருக்க இரண்டு வாரம் மட்டும் இந்த நட்சத்திர சோம்பு பேஸ் பேக் போடுங்க. 60 வயசிலையும் 20 வயசு போல இளமையா இருக்க சூப்பர் ரெமிடி.

star anice beauty
- Advertisement -

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் இது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் வயது கூட கூட முகத்தில் உள்ள தோள்கள் சுருங்கி முதுமை தோற்றம் வர தொடங்கி விடும். இதுவும் அனைவரும் தெரிந்தது தான். ஆனாலும் இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லோருமே எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான ஒரு எளிய அழகு குறிப்பு பற்றி தான் இப்போது இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முகம் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் எனில் முதலில் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். தேவையற்றவற்றை மனதில் போட்டு எந்த நேரமும் குழப்பிக் கொண்டு இருக்காமல் இருந்தாலே முகம் நல்ல பொலிவுடன் முகச்சுருக்கங்கள் வராமல் இருக்கும். இதைத் தவிர்த்து நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள் சுற்றுச்சூழல் போன்றவற்றிலும் சிறு சிறு மாற்றங்களை செய்தால் நீண்ட நாட்கள் இந்த முக சுருக்கம் வராமல் தப்பித்து விடலாம்.

- Advertisement -

முக சுருக்கம் வராமல் இருக்க அண்ணாச்சி பூ ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்குக்கு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அண்ணாச்சி பூவை தான் பயன்படுத்த போகிறோம். இது முக சுருக்கம் வராமல் தடுக்க பெரிதும் உதவி செய்யும். இப்போது இதை வைத்து எப்படி ஃபேஸ் பேக் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

அதற்கு முதலில் நான்கு அன்னாச்சி பூவை எடுத்து நம் வீட்டில் இருக்கும் இடி உரலில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் செய்ய வேண்டாம். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் போது நாம் கொடுத்து வைத்திருக்கும் இந்த அண்ணாச்சி பூ பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அது அரை டம்ளர் தண்ணீராக மாறும் வரை கொதிக்க வேண்டும். அப்போது தான் இதன் சாறு முழுவதும் இறங்கும்.

- Advertisement -

தண்ணீர் பாதி அளவு சுண்டியதும் அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே ஆற விடுங்கள். இந்த தண்ணீர்ஆறிய பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை பிரிட்ஜில் வைத்து இரண்டு வாரம் வரை பயன்படுத்தலாம். இப்போது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த தண்ணீரை சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஐந்து சொட்டு பாதாம் எண்ணெய் சேர்த்து அதையும் நன்றாக குழைத்த பிறகு உங்கள் முகத்தில் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த பேக் பத்து நிமிடம் வரை உங்கள் முகத்தில் இருந்தால் போதும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து விடுங்கள். அதன் பிறகு சுத்தமான ரோஸ் வாட்டர் எடுத்து முகத்தில் லேசாக தேய்த்து விடுங்கள் போதும். இதை ஒருநாள் விட்டு ஒரு நாள் என இரண்டு வாரம் தொடர்ந்து செய்தாலே போதும். உங்கள் முகத்தில் உள்ள முகச்சுறுக்கங்கள் எல்லாம் மறைந்து விடும். முகம் சுருக்கம் வரக் கூடாது என நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை இந்த பேக்கை பயன்படுத்தி வரலாம். இதன் மூலம் முகத்தில் இருக்கும் ஓபன் போர்ஸ் கூட மறைந்து முகம் பளிச்சென்று மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: நமக்கு மட்டும் உதடு கருப்பா இருக்கேன் பீல் பண்றீங்களா? கவலையை விடுங்க ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க. உங்க உதடு கோவை போல செவசெவன்னு மாறிடும்.

இதில் இருக்கும் முல்தானி மெட்டி பாதாம் எண்ணெய் இரண்டுமே முகத்தை இளமையாக வைத்திருக்கக் கூடிய தன்மை உடையது. இவற்றை சேர்த்து செய்யக் கூடிய இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது முகச்சுருக்கம் இருந்தாலும் மறைந்து விடும். இந்த பதிவில் உள்ள அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பிரச்சனைகளுக்கு நீங்களும் இதை பயன்படுத்தி தீர்வு காணலாம்.

- Advertisement -