முகம் அழகாக இருக்க இயற்கையாக கிடைக்கும் இந்த தர்பூசணி பழம் பெரும் அளவில் உதவி புரிகிறது

face
- Advertisement -

என்னதான் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி தற்காலிகமான அழகை பெற்றாலும் இயற்கையான முறையில் கிடைக்கின்ற அழகுதான் நிரந்தரமாக இருக்கும். அவ்வாறு நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி நமது முகத்தை அழகாக பராமரித்துக்கொள்ள முடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வாட்டர்மெலன் வைட்டமின்களையும், ஆன்டி ஆக்சிடண்ட்களையும் கொண்டிருக்கிறது. உடலுக்கு நீரேற்றம் தருவது போலவே சருமம் வறட்சியாவதிலிருந்து தடுத்து பொலிவை தருகிறது. இதை செலவில்லாமல் வீட்டிலேயே எளிதாக செய்து கொள்ள முடியும். பொதுவாக கோடை காலங்களில் ஒரு துண்டு தர்பூசணியை சுவைத்தாலே உடலுக்கு இதமாகவும், தாகத்தை தீர்க்கவும் அது உதவும்.

- Advertisement -

அதே தர்பூசணியை கொண்டு நீங்கள் வீட்டிலேயே உங்கள் முகத்திற்கு தேவையான ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். இதிலுள்ள அதிகமான நீர்ச்சத்து உங்கள் சருமத்தை அதிகமாக பொலிவுறச் செய்யும். எனவே கண்டிப்பாக உங்கள் வீட்டிலேயே நீங்கள் இதை முயற்சித்து பார்க்கலாம். தர்ப்பூசணி உங்கள் முகத்தை தெளிவாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்க‌ வைக்க தேவையான புத்துணர்வூட்டும்.ஒரு கிண்ணத்தை எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் தர்பூசணி சாறு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் விட்டு நன்கு கிரீம்‌‌ போல ஆகும் வரை கலந்துக் கொள்ளவும். பின் அதை உங்கள் சருமத்தில் பூசி 15 லிருந்து 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின் சாதாரண நீரில் உங்கள் முகங்களை கழுவிவிட்டு கண்ணாடியில் பாருங்கள். அடுத்த கணமே அந்த மேஜிக்கை உணர்வீர்கள் இரண்டு துண்டு தர்பூசணியை ஒரு பவுலில் போட்டு கையால் பிசையவும். பின் வெள்ளரிக்காய் சாறு ஒரு டேபிள் ஸ்பூனும் முல்தானி மெட்டி ஒரு டேபிள் ஸ்பூனும் சேர்த்து பேஸ்ட் போல ஆகும் வரை மிக்ஸ் செய்யவும்.

பின் ‌அப்படியே முகத்தில் அப்ளை செய்து 15 – 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரில் முகங்களை கழுவவும். ஃபேஸ்வாஷ் அல்லது சோப்களை தவிர்த்து விடுங்கள்ஒரு டேபிள்ஸ்பூன் தர்பூசணி சாறுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்குங்கள்.உங்கள் ஃபேஸ் மாஸ்க் மிருதுவாக வர கொஞ்சம் மட்ச்சா கிரீன் டீ பொடியை சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் உங்கள் முகத்திலிட்டு 15 முதல் 20 நிமிடம் வரை காத்திருங்கள். பின் சாதாரண நீரில் கழுவிவிடுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் முகங்களை சுத்தமாக கழுவி விடுங்கள். மேலும் அசுத்தமான கைகளால் ஃபேஸ் மாஸ்க் செய்யாதீர்கள். உங்கள் முகத்தை கழுவிய பின், கொஞ்சம் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்வது முகம் வறண்டு போகாமல் தடுக்கும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்திய உடனே உங்களுக்கு சருமம் ஜொலிக்க வேண்டுமா? அப்படியென்றால் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன்பு பத்து நிமிடங்கள் நீராவியில் உங்கள் முகத்தை காட்டவும்.

இதனால் உங்கள் சருமத்திலுள்ள துளைகள் திறந்துக்கொண்டு தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள ஊட்டச்சத்துக்களை இரண்டு மடங்கு நன்றாக உறிந்துக் கொள்ளும். இது உங்கள் சருமத்தை இரட்டிப்பு பொலிவாக்க உதவும். அதேபோல் இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு நாட்கள் உபயோகிப்பது நல்ல பலனை தரும்.

- Advertisement -