உங்கள் முகம் கண்ணாடியை போல பளப் பளப்பாக இருக்க, இதை மட்டும் செய்ங்க போதும். இனி மேக்கப் போட வேண்டிய அவசியமே கூட இருக்காது

- Advertisement -

நம் அனைவருக்கும் முகத்தை அழகாக்கி கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்யும். இப்போது எல்லாம் சின்ன பிள்ளைகள் கூட மேக்கப் போட விரும்புகிறார்கள். இந்த வகையில் பெரியவர்கள் மட்டும் இன்றி சிறு பிள்ளைகள் கூட தங்களை நல்ல நிறமாகவும், இளமையாகவும் பிரதிபலித்துக் கொள்ளதான் விரும்புகிறார்கள். அப்படியானவர்கள் இந்த குறிப்பில் உள்ள சிறு சிறு விஷயங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் போதும் முகம் என்றென்றைக்கும் நல்ல பளப் பளப்புடன் இருப்பதுடன், மேக்கப் என்ற ஒரு விஷயத்தை நினைத்துக் கூட பார்க்க வேண்டாம், வாருங்கள் அது என்னென்ன குறிப்பு எப்படி செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.

முகத்தை எப்போதும் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்றால் தினமும் மேக்கப் தான் போட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நம் வீட்டிலிலே சிறு சிறு விஷயங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே போதும் முகம் பாதிக்காமல் அழகா ஜொலிக்கலாம்.

- Advertisement -

ரோஸ் வாட்டர்ரை தினமும் உங்கள் முகத்தில் இரண்டு அல்லது மூன்று முறை ஸ்பிரே செய்த பிறகு அதை ஒரு நல்ல மிருதுவான காட்டன் துணி கொண்டு துடைத்து வந்தால் முகம் எப்பொழுதும் பிரஷ்ஷாக இருக்கும்.

அதே போல அரிசி ஊற வைத்த தண்ணீரை கொண்டு தினமும் முகம் அலம்பும் போதும் அதுவும் உங்கள் முகத்திற்கு நல்ல ஒரு நிறத்தை கொடுக்கும். இந்த தண்ணீரை ஒரு காட்டன் பஞ்சு வைத்து நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்து சிறிது நேரம் கழித்து கழுவி விட்டாலும், முகம் நல்ல புத்துணர்ச்சியுடன் பார்க்க நன்றாக இருக்கும். இப்படி செய்வதால் இந்த அரிசி கழுவிய தண்ணீர் உங்கள் முகத்தில் சிறிது ஊறும், வாய்ப்பு இருப்பவர்கள் இந்த முறையே செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இத்துடன் சேர்த்து இந்த ஒரு பேக்கையும் தினமும் போட்டு வந்தால் உங்கள் ஸ்கின் கண்ணாடி போல பிரதிபலிக்கும். அதற்கு சுத்தமான ஆலுவேரா ஜெல் 2 ஸ்பூன், ரோஜா இதழ் பவுடர் (இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்) ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் ரோஸ் வாட்டரில் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து கொஞ்ச நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு ஒரு ஈரமான துணியை வைத்து உங்கள் முகத்தை லேசாக துடைத்து விட்டால் போதும், உங்கள் முகம் மேக்கப் இல்லாமலே மின்ன ஆரம்பித்து விடும். இந்த பேக்கை வாரம் ஒரு முறை செய்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

இந்த முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் போதும் நீங்கள் மேக்கப் போட வேண்டிய அவசியமே இருக்காது. மேக்கப் என்ற பெயரில் கெமிக்கல் கலந்த கிரீமை பயன் படுத்தாமல், இது போன்ற எளிமையான முறையை பயன்படுத்தி நிரந்தர முக அழுகை பெறுங்கள்.

- Advertisement -