பார்லருக்கு சென்று செலவு செய்யாமல் இந்த மூன்று பொருட்களை வைத்து வீட்டிலேயே உங்கள் முகத்தை பளிச்சென்று மாற்ற முடியும்

face
- Advertisement -

முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை உள்ளது. ஆனால் வெளியில் வேலைக்கு சென்று வருபவர்கள் வீடு திரும்பி வரும் பொழுது அவர்களின் முகம் எப்பொழுதையும் விட அதிக சோர்வாக இருக்கும். இவ்வாறு தினமும் சரியான உணவு சாப்பிடாமல், சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் வெளியில் சென்று வருபவர்களுக்கு முகத்தில் கரும்புள்ளிகள், மங்குகள், கருவளையம் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இவ்வாறு அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. அதிலும் எதை செய்தாலும் அதனை உடனடியாக செய்யவேண்டும். நேரம் குறைவாக இருப்பதால் கிடைத்த நேரத்தில் முகத்தைப் பராமரிக்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாகும். இவ்வாறு நேரம் இல்லாதவர்கள் இந்த க்ரீமை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் 15 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். வாருங்கள் இந்த ஃபேஸ் க்ரீமை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சோற்றுக்கற்றாழை பெரிய துண்டு – 1, சோளமாவு – இரண்டு ஸ்பூன், ஆலிவ் விதை – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
சோற்றுக் கற்றாழையை முதலில் சுத்தமாக கழுவிக் கொண்டு, அதன் ஓரங்களில் இருக்கும் முள் போன்ற பகுதிகளை வெட்டி தனியாக எடுத்து விட வேண்டும். பிறகு இதனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் தண்ணீரில் அலசி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி, இதன் சாறை வடித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் இரண்டு ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரத்தில் இவை கெட்டியாகி ஜெல் பதத்திற்கு வந்து விடும். இதனை அப்படியே ஆறவைக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் ஆலிவ் விதை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதனையும் அடுப்பின் மீது வைத்து சிறிது நேரம் சூடுபடுத்த ஜெல் போன்ற பதத்திற்கு மாறிவிடும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அரைத்து வடிகட்டியை பயன்படுத்தி சாறை மட்டும் வடித்து எடுக்க வேண்டும். பின்னர் செய்து வைத்துள்ள அலோ வேரா ஜெல்லுடன் ஆளி விதையின் ஜெல்லை இரண்டு ஸ்பூன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தடவி, 10 நிமிடம் அப்படியே உலர வைத்து, அதன் பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகம் தங்கம் போன்று பலபலக்க ஆரம்பிக்கும். இந்த ஜெல்லை 15 நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -