உங்கள் முகம் எப்போதும் எண்ணெய் வடிவதால் எந்த மேக்கப்பும் போட முடியவில்லையா? இந்த சீரம் இருந்தால் போதும் மேக்கப் போடாமலே களங்கமில்லா முக அழகை பெறலாம்.

- Advertisement -

முகம் எப்போதும் நல்ல பிரகாசமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையாக இருக்கும். சிலருக்கு எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும், என்ன தான் அழகு குறிப்புகளை பயன்படுத்தினாலும் முகம் எப்போதும் டல்லாகவே எண்ணெய் வடிந்தது போல காணப்படும். அப்படியானவர்கள் இந்த சீரம் தயார் செய்து வைத்து தினமும் இரவில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த பிரச்சனைகள் எல்லாம் சுலபத்தில் சரியாகி விடும். அதை எப்படி தயார் செய்வது எப்படி பயன்படுத்துவது என்பதை எல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த சீரம் தயாரிக்க நமக்கு தேவை பன்னீர் ரோஜா பொடி, ரோஸ் வாட்டர், ஆலுவேரா ஜெல், கஸ்தூரி மஞ்சள். இதில் சேர்க்கும் இந்த பன்னீர் ரோஜா பொடியையும் ரோஸ் வாட்டரையும் நாம் வீட்டிலே தயார் செய்து வைத்துக் கொண்டால், எப்பொழுதுமே இதை முகத்திற்கு பயன்படுத்தி வரலாம். முகத்திற்கு இது இரண்டுமே அதிக நிறத்தையும் சரும வறட்சியும் போக்கி எப்போதும் ஒரு பளபளப்பு தன்மையும் கொடுக்கும். இதை கடைகளில் வாங்காமல் நாமே தயார் செய்து வைத்து பயன்படுத்தும் போது இதன் பலன் இன்னும் அதிகமாகவே கிடைக்கும்.

- Advertisement -

இப்போது ஒரு பவுலில் கால் டீஸ்பூன் அளவிற்கு மட்டும் இந்த பன்னீர் ரோஜா பொடி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அரை டீஸ்பூன் ஆலுவேரா ஜெல், கால் டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இவை அனைத்தையும் சேர்ந்து நல்ல ஒரு லிக்விட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.இதை நன்றாக கட்டிகள் இல்லாமல் கலக்க வேண்டும்.

இரவு தூங்க செல்லும் முன் உங்கள் முகத்தை நன்றாக துடைத்து விட்டு, இந்த சீரத்தை கையில் எடுக்காமல் ஸ்பூனை வைத்து எடுத்து தொட்டு உங்கள் முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இது தண்ணீர் போல இருப்பதால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஸ்பூனை தொட்டு உங்கள் முகத்தில் வைத்தாலே அந்த லிக்விட் உங்கள் முகத்தில் ஒட்டிக் கொள்ளும். அப்படியே ஸ்பூனை வைத்து உங்கள் முகத்தை தொட்டு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த சீரம் போடும் முன் ஸ்பூனை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்தால், அந்த குளர்ந்த ஸ்பூனால் மசாஜ் செய்வது முகத்திற்கு இன்னும் கூடுதல் பலனை கொடுக்கும். இதை முகத்தில் போட்ட பிறகு முகம் அலம்ப வேண்டிய அவசியம் இல்லை அப்படியே தூங்கி விடலாம். மறுநாள் காலையில் உங்கள் முகத்தை துடைத்துப் பாருங்கள் அவ்வளவு பிரகாசமாக இருக்கும்.

- Advertisement -

இது மிக மிக எளிமையானமுறை இந்த சீரம் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம் அதன் பிறகு வேறு தயார் செய்து கொள்ளுங்கள்.

இதை தினமும் இரவில் நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள், முகப்பருக்கள் எண்ணெய் பசை தன்மை, முக வறட்சி இப்படி அனைத்தும் நீங்கி உங்கள் முகம் நல்ல கண்ணாடியை போல பளபளப்பாக இருக்கும். ஆண்களும் இதை பயன்படுத்தலாம் மஞ்சளை மட்டும் தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -