உச்சி முதல் பாதம் வரை வசீகரத்தை பெற இதை மட்டும் செய்தாலே போதும். முகம், சொல், செயல், பேச்சு அத்தனையும் அழகு பெறும்.

women
- Advertisement -

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு வெறும் அறிவும் திறமையும் மட்டும் இருந்துவிட்டால் போதாது. இதோடு சேர்ந்த வசீகரத் தன்மையும் ஒருவரிடம் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்றாலும், நம்மிடம் ஒரு வசீகரம் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சொல்வதை அடுத்தவர்கள் கேட்பார்கள். நாம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கு வெற்றியும் கிடைக்கும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெறும் அழகைப் பற்றி மட்டும் சொல்லும் விஷயம் அல்ல இது. அழகைத் தாண்டி முகப்பொலிவு, லட்சுமி கடாட்சம், வசீகரம் என்று நிறைய விஷயங்கள் உள்ளது.

women8

சில பேரை பார்க்கும் போது, சில பேரிடம் பேசும்போது அவர்களை எதற்காக பிடிக்கின்றது என்று சொல்லவே முடியாது. பார்ப்பதற்கு அழகாக கூட இருக்க மாட்டார்கள். ஆனால் அவரிடம் இருக்கக்கூடிய ஈர்ப்புத் தன்மை, வசீகரத் தன்மை நம்மை கவரும். சில பேருக்கு இந்த வசீகரத் தன்மை இயற்கையாகவே அமையும். சிலபேருக்கு வசீகரம் அழகு கலை என்பது இயற்கையாக இருக்காது. இந்த வசீகரத்தை ஆன்மீக ரீதியாக பெறுவதற்கு ஏதேனும் வழி உள்ளதா. நிச்சயம் உண்டு. அதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஒரு நாள், இரண்டு நாள் இதை செய்துவிட்டு வசீகர தோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் அது நடக்காது. கட்டாயமாக 108 நாட்கள் தொடர்ந்து பின் சொல்லக்கூடிய விஷயத்தை செய்து வந்தால் நீங்களும் வசீகரமாக மாறிடுவீங்க. உங்களுடைய முகம் பொலிவடையும். உங்கள் பேச்சு அழகாகும். உங்களுடைய செயல்பாடுகள் அனைத்துமே வெற்றியை கொடுக்க கூடியதாக அமையும்.

sucess-man

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையிலோ அல்லது உங்கள் வீட்டில் வேறு ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து, ‘ஓம் ரீம் வசி வசி’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரித்தால் நான்கு திசைகளும் உங்கள் வசமாகும். எட்டுத் திக்கில் இருந்து நேர்மறை ஆற்றல் உங்களைத் தேடிவரும். பஞ்சபூதங்களும் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.

- Advertisement -

நம்மை சுற்றி இருக்கும் இயற்கையான இந்த விஷயங்களே இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது, நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் நிச்சயம் நம் சொல்லுக்கு கட்டுப்பட்டு, நம் வசம் அவர்கள். வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை பெற இந்த மந்திரம் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். (இந்த மந்திரத்தை தவறாக எந்த விஷயத்திற்கும் பயன்படுத்தி கொள்ள முடியாது. நல்லதை நினைத்து நல்லதுக்காகவே பயன்படுத்துபவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.)

Sivan-God

இந்த மந்திரத்தை உச்சரித்த சில நாட்களிலேயே உங்களிடத்தில் இருக்கும் வித்தியாசத்தை உங்களை சுற்றி இருப்பவர்கள் உணர ஆரம்பித்து விடுவார்கள். மிகவும் நெருக்கமானவர்கள் உங்களிடம் உள்ள மாற்றத்தை கண்டு பிடித்து நிச்சயமாக உங்களிடம் சொல்லுவார்கள். நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் ரகசியத்தை மட்டும் யாரிடமும் சொல்ல வேண்டாம்.

sivan2

நீங்க வேணும்னா இந்த மந்திரத்தை 11 நாட்கள் உச்சரித்து பாருங்கள். உங்களுடைய நடவடிக்கைகளில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். மனதார எம்பெருமானை நினைத்து நாளை முதல் நீங்களும் இந்த சுலபமான மந்திரத்தை உச்சரித்து வசீகரத் தோற்றத்தைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று அந்த இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -