உங்கள் முகம், பேச்சு, நடை, உடை பாவனை அனைத்தும் அழகாக, வசீகர தோற்றத்தைப் பெற வேண்டுமா? பார்ப்பவர்கள் அனைவருக்கும் உங்களை பிடிக்க, இந்த 1 சொம்பு தண்ணீரில் முகம் கழுவி, வாய் கொப்பளித்தால் போதும்.

face
- Advertisement -

வெறும் திறமை இருப்பவர்களால் மட்டும் வாழ்க்கையில் உயர்ந்துவிட முடியாது. வெறும் திறமையை வைத்துக்கொண்டு மட்டும் பெரிய பதவி உயர்ந்த இடத்தை பெறவும் முடியாது. வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் வசீகரமும் ஒருவருக்கு கட்டாயம் தேவை. சிலரைப் பார்த்து இருப்போம். புத்திசாலியாக அறிவாளியாக திறமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் வசீகரத் தன்மை குறைவாகத்தான் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உயர்பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

women8

இதுவே சில பேரை பார்த்து இருப்போம். பார்ப்பதற்கு அழகாகவும் வசீகர தன்மையோடும் இருப்பார்கள். அதேசமயம் அழகாகவும் பேசுவார்கள். அவர்களுடைய பேச்சிலேயே மயக்கி விடுவார்கள். இவர்களுக்கு புத்தி கூர்மையும் அறிவும் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இவர்கள் உயர்ந்த பதவியில், உயர்ந்த அதிகாரங்களைக் கொண்டு நான்கு பேரை தனக்கு கீழே வேலை வாங்கும் இடத்தில் இருப்பார்கள்.

- Advertisement -

இதற்காக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அறிவு தேவையில்லை, அழகும் வசீகரம் மட்டும் இருந்தால் போதும் என்று சொல்ல வரவில்லை. அறிவோடு சேர்த்து வசீகரத் தன்மையும் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை. அறிவு இருந்தும் வசீகரத் தன்மை இல்லாதவர்கள் இதை நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். உங்களுக்கு உங்களுடைய முகத்தில் பேச்சில் நடை உடை பாவனையில், அழகும் வசீகரத் தன்மையும் தேவைப்படுகிறதா இந்த பரிகாரத்தை தொடர்ந்து 15 நாட்கள் செய்து பாருங்கள். உங்களுடைய வசீகரத் தன்மை கூடும். உங்களுடைய பேச்சில் வசிய தன்மை ஏற்படும். உங்களைப் பார்ப்பவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.

women4

எப்போதும் போல காலையில் எழுந்து பல் தேய்த்து குளித்து விடுங்கள். அதன் பின்பு ஒரு பித்தளை அல்லது செம்பினாலான சொம்பை எடுத்து கொள்ளுங்கள். அந்த சொம்பில் நிறைய சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த சொம்பை கையில் வைத்துக் கொண்டு அந்தச் சொம்பின் வாய்ப்பகுதியில் உங்கள் வலது கையை வைத்து, மூடிக்கொண்டு இந்த மந்திரத்தை 7 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் உச்சரிக்கும் மந்திரத்தின் சக்தி உங்களுடைய வலது கையின் மூலமாக அந்த தண்ணீரில் இறங்கி விடும். உங்களுக்கான மந்திரம் இதோ. ‘ஓம் வஷ்யமுகி ராஜமுகி சுவாகா’ மந்திரத்தை 7 முறை உச்சரித்து விட்டு, சொம்பில் இருக்கும் தண்ணீரில் முதலில் மூன்று முறை வாய் கொப்பளித்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை குடிக்கக் கூடாது. கொப்பளித்து தண்ணீரை வெளியேற்றி துப்பி விடுங்கள்.

sombu

சொம்பில் மீதமிருக்கும் தண்ணீரில் உங்களுடைய முகத்தை அப்படியே அலம்பி கொள்ளுங்கள் போதும். தினம்தோறும் இப்படி மந்திரத்தை உச்சரித்த இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து முகம் கழுவுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். எண்ணி 15 நாட்களில் உங்களுடைய முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும். உங்கள் வார்த்தையில் ஒரு வசீகரம் தோன்றும்.

face-wash

உங்களைப் பார்ப்பவர்கள் உங்களிடம் உள்ள வித்தியாசத்தை குறிப்பிட்டு கட்டாயம் சொல்லுவார்கள். இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய 48வது நாள் நிச்சயமாக நீங்கள் எதிர்பாராத நல்ல மாற்றம் ஒன்று உங்களிடம் உங்களாலேயே உணர முடியும். நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்து இதை விட்டுவிட வேண்டாம். பரிகாரத்தை அப்படியே தொடர்ந்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -