முகம் பளிச்சுன்னு பிரகாசமா மாற ஃபேஸ் பேக்

hibiscus face pack
- Advertisement -

முகத்தை எப்போதும் அழகாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று தான் அனைவருமே நினைப்பார்கள். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது முகம் பார்க்க அழகாகவும் வசீகரமாகவும் இருக்கும் எனில் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.

அப்படி அழகான வசீகர தோற்றத்தை பெற வேண்டுமென்றால் அதற்கு ஒரே தீர்வு அழகு நிலையம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். இதைத் தவிர்த்தால் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் எல்லாம் அழகு கூடினாலும் அது நிச்சயமாக நிரந்தரமானது கிடையாது.

- Advertisement -

மேலும் இதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.இயற்கையான முறையில் அழகை அதிகரித்துக் கொள்ள நிறத்தை தக்க வைத்துக் கொள்ள ஒரு அருமையான வழிமுறை உள்ளது. அதைப் பற்றி தான் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

முகம் பளிச்சென்று மாற ஃபேஸ் பேக்

முகத்தை பிரகாசமாகவும், வசீகரத் தோற்றத்துடனும் இளமையாகவும் வைத்துக் கொள்ளக் கூடிய அந்த அற்புதமான பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம். அதற்கு முதலில் நாட்டு செம்பருத்தி என்று சொல்லப்படும் ஒற்றை செம்பருத்தி எட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதன் உள்ளிருக்கும் மகரந்தம், காம்பு இரண்டையும் எடுத்து விட்டு, ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இந்த செம்பருத்தி இதழ்களில் அதை சேர்த்து கொதிக்க விடுங்கள். ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதித்த பிறகு தண்ணீரை மட்டும் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் நன்றாக ஆற வேண்டும்.

அதன் பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு இயற்கையான ஜெல் கிடைத்தால் நல்லது இல்லை எனில் வெள்ளை நிறத்தில் கிடைக்கும் ஜெல்லை பயன்படுத்துங்கள். இத்துடன் விட்டமின் ஈ கேப்ஸ்யூல் இரண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் கிளிசரின் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்த்த பிறகு இந்த சிறிது நேரம் ஸ்பூன் வைத்து நன்றாக கலந்தால் லிக்வீட் பதத்திற்கு வந்து விடும். இதை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இதை தினமும் இரவு உறங்கும் இரண்டு சொட்டு எடுத்து முகத்தில் தேய்த்து விட்டு அப்படியே உறங்கி விடுங்கள்.

மறுநாள் காலையில் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்புங்கள். அலம்பும் போது சோப்பு எதையும் பயன்படுத்த வேண்டாம். முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், கரும் திட்டுகள், வெயிலினால் ஏற்பட்ட கருமை கருவளையம், முகப்பரு தடம் அனைத்தும் மறைந்து மாசு மருவில்லா மேனி அழகை பெற அற்புதமான ஃபேஷ் பேக் இது.

இந்த பேக் தயாரிக்க செம்பருத்தி பூ கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் செம்பருத்தி பூ பொடி கிடைக்கும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பொடியுடன் கொஞ்சம் ரோஸ் வாட்டரை சேர்த்து மற்ற பொருட்களையும் சேர்த்து இதே போல தயாரித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சரும நிறத்தை அதிகரிக்கும் கல் உப்பு

இயற்கையான முறையில் அழகை தக்க வைக்கும் இந்த ஃபேஸ் பேக் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -