உங்க முகம் தங்கம் போல ஜொலிப்பதோடு,வசீகரமாகவும் இருக்கணும் நினைச்சா, ஆவாரம் பூவுடன் இந்த பொருளை சேர்த்து ட்ரை பண்ணுங்க. உங்க முகத்தை நீங்களே அடிக்கடி கண்ணாடியில் பார்த்து ரசித்து கொண்டே இருப்பீங்க.

- Advertisement -

அந்த கால பெண்களின் முகத்தை பார்த்தால் நல்ல நிறமாக இருப்பதுடன் முகத்தை பார்க்கும் போதே இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்னும் அளவிற்கு அந்த முகத்தில் அழகுடன் கூடிய ஒரு வசீகரம் இருக்கும். இத்தனைக்கும் அந்த காலங்களில் எல்லாம் அழகுக்கு என பெரிய அளவில் எந்த செலவும் செய்து கொள்ள மாட்டார்கள். பிறகு எப்படி இந்த முகத்தில் அத்தனை அழகும், வசீகரமும் என்று ஒரு கணம் யோசிக்க வைக்கும் படி தான் அவர்களின் முகத் தோற்றம் இருக்கும். அதற்கு அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தியது இயற்கையான முறைகளை தான். அந்த வகையில் ஒரு இயற்கையான ஃபேஸ் பேக்கை தான் இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

இப்படி வசீகரமான அழகை கொடுக்கக் கூடிய பொருள்களில் ஒன்று தான் ஆவாரம் பூ. இந்த ஆவாரம் பூவை வைத்து தான் இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்யப் போகிறோம். ஆவாரம் பூ கிடைத்தால் அதை அப்படியே எடுத்து அரைத்து முகத்தில் தேய்க்கலாம். இது நல்ல பலனை கொடுக்கும் கிடைக்காதவர்கள் ஆவாரம் பூ பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆவாரம் பூ ஃபேஸ் பேக்கை தயார் செய்யும் முறை:
ஆவாரம் பூ ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து அதை சுத்தம் செய்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பாலாடை, கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேக்கை போடும் முன்பு உங்கள் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்த இந்த பேக்கை உங்கள் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்து உங்கள் கைகளில் கொஞ்சமாக தண்ணீர் தொட்டு மறுபடியும் இந்த ஆவாரம் பூ பேஸ்பேக்கில் லேசாக ஊற்றி எடுத்து மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு நல்ல சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். இந்த ஆவாரம் பூ பேக் போட்டு முகத்தை கழுவும் போது சோப்பு எதையும் பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

இந்த ஆவாரம் பூ பேக் அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஒன்று தான். உடல் அதிக குளிர்ச்சி உள்ளவர்கள் மட்டும் இந்த பேக்கை பத்து நிமிடம் வைத்திருந்தால் போதும். இதை வெயிலில் சென்று வந்த பிறகு முகம் எல்லாம் கருத்து போயிருக்கும் அந்த சமயத்தில் இந்த பேக்கை போட்டால் முகம் நிமித்தில் பளீச்சென்று மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த ரெண்டு பொருளை எப்படி யூஸ் பண்ணனும் மட்டும் தெரிஞ்சா போதும், எந்த ஃபங்ஷன் போக்கணும்னாலும் டக்குனு ரெடி ஆகிடலாம். அப்புறம் ஃபங்ஷன்ல இருக்கவங்க எல்லா பார்வையும் உங்க மேல தான் இருக்கும் அப்படி ஜொலிப்பீங்க.

இந்த ஆவாரம் பூ பொடி கிடைத்தால் அதை வாங்கி அதனுடன் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், சேர்த்து கலந்து அதை தினமுமே பயன்படுத்தி வந்தால், சரும பிரச்சனைகள் ஏதுமின்றி  நிறத்தை கூட்டி சருமம் நல்ல பளப்பளப்பாக மாறுவதுடன், முகம் அழகாக மாறி விடும்.

- Advertisement -