ஒரு முறை உங்க முகத்தில் இதை தடவின உங்க முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு மாதிரி பளிச்சென்று பிரகாசமா மாறிடும். இது தெரியாம பியூட்டி பார்லர்ல கொண்டு போய் இவ்வளவு செலவு பண்ணிட்டோம்ன்னு வருத்தபடூவீங்க.

face beauty
- Advertisement -

முகத்தை நல்ல நிறமாக மாற்ற இப்போது எத்தனையோ கெமிக்கல் கலந்த கிரீம்கள் கிடைக்கிறது. இது மட்டும் இன்றி அழகு நிலையத்திற்கு சென்றால் அங்கும் பல வகையான கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தி நிறத்தை அதிகரிக்க செய்கிறார்கள். இப்படி எல்லாம் செய்வதன் மூலம் நம்முடைய சருமம் எவ்வளவு பாதிப்பு அடைகிறது என்பதை பற்றி பலரும் யோசிப்பது கிடையாது. அந்த நேரத்தில் முகம் பளிச்சென்று மாறினால் போதும் என்று நினைக்கிறார்கள். அது நாளடைவில் அவர்களுடைய சருமத்தை பெரிதும் பாதிப்படைய செய்துவிடும்.

இந்த அழகு குறிப்பு பதிவில் எந்த வித கெமிக்கலும் கலக்காமல் வீட்டில் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்தே அதிக அளவு நம்முடைய நிறத்தை அதிகரிக்கக் கூடிய ஒரு அருமையான குறிப்பை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். வாங்க இப்போது அதை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஒரே நாளில் முகம் வெள்ளையாக மாற ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி மாவிற்கு பதிலாக கடலை மாவு, கோதுமை மாவு உங்களிடம் எது இருக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டீஸ்பூன் நல்ல கெட்டியான அதிகம் புளிக்காத தயிர், ஒரு டீஸ்பூன் ஆலுவேரா ஜெல், ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால் நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும்.

இந்த பேக்கை முகத்தில் போடுவதற்கு முன்பாக முதலில் காய்ச்சாத பாலை தொட்டு முகம் முழுவதும் ஒற்றி எடுத்து இரண்டு நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பிய பிறகு, டவல் வைத்து முகத்தில் உள்ள ஈரத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பேக்கில் இருந்து கொஞ்சமாக எடுத்து உங்கள் முகம் முழுவதும் தேய்த்து லேசாக ஸ்கிரப் செய்ய வேண்டும். உங்கள் முகத்தில் அதிகமான முகப்பருகள் இருந்தால் இந்த ஸ்க்ரப்பின் முறையை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

ஸ்கிரப் செய்த பிறகு முகத்தை மீண்டும் ஒருமுறை துடைத்த பிறகு மறுபடியும் இதே பேக்கை கொஞ்சம் அதிகமாக எடுத்து முகம் முழுவதும் அடர்த்தியாக பூசி 30 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். 30 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள் போதும்.

இந்தப் பேக்கை இரவு உறங்க செல்வதற்கு முன் போடுவது நல்லது. இது போன்ற பேக்குகளை நாம் எப்போதும் இந்த நேரத்தில் பயன்படுத்தினால் அதை போட்ட பிறகு நம் முகத்தில் தூசி வெயில் போன்றவை படாமல் இருக்கும். அந்த சமயத்தில் இந்த பொருட்கள் எல்லாம் நம் முகத்தில் நன்றாக வேலை செய்ய உதவும்.

இதையும் படிக்கலாமே: இந்த 5 பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு எடுத்தால், அம்சமான பேரழகை 5 நாட்களில் பெறலாம். பிறகு நீங்கள் அழகி போட்டியில் கலந்து கொண்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதை ஒரே ஒரு முறை பயன்படுத்தினாலே உங்கள் முகத்தில் அவ்வளவு பெரிய மாற்றம் தெரியும். முக சுருக்கம், முக வறட்சி, கருத்திட்டு, முகப்பருக்கள், என அனைத்தையும் நீக்கக்கூடிய அற்புதமான குறிப்பு. இதை ஆண்கள் பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம். ஆண்கள் பயன்படுத்தும் போது இதில் மஞ்சளை மட்டும் தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -