இன்ஸ்டன்டா உங்க முகம் மில்கி ஒயிட்டா மாறனும்னா, அப்படினா இந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க. அப்புறம் யோசிப்பீங்க இதுக்காகவா பார்லருக்கு போய் இவ்வளவு பணத்தை செலவு பண்ணோம்ன்னு

face pack
- Advertisement -

இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் எல்லாவற்றிற்குமே உடனடி தீர்வை தான் நாம் எதிர்பார்க்கிறோம். இந்த அழகு விஷயத்திலும் அப்படி தான் இயற்கையான முறையில் அழகு படுத்திக் கொள்ள நிறைய வழிமுறைகள் இருந்தாலும் அதற்கெல்லாம் கொஞ்சம் கால அவகாசம் என்பதை கொடுக்க வேண்டும். இன்றைய சூழ்நிலை அதற்கு ஏற்புடையதாக இல்லை எனவே தான் அனைவரின் பார்வையும் பார்லர் பக்கம் திரும்பி விட்டது. காரணம் அதில் போடப்படும் அந்த கிரீம்களினால் உடனடியாக நம் முகத்தில் மாற்றம் தெரிந்து விடுகிறது. இது போல ஒரு இன்ஸ்டன்ட் ஃபேஸ் க்ரீமை இனியும் பார்லர்களின் உதவியை நாடாமல் நாம் வீட்டிலே செய்து முகத்தை பளிச்சென்று மாற்றிக் கொள்ள ஒரு எளிமையான குறிப்பு இந்த பதிவில் உள்ளது வாங்க அதை என்னவென்று பார்க்கலாம்.

முகத்திற்கு பால், தயிர் இது போன்றவைகள் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை மிருதுவாக்கி நல்ல ஒரு போஷாக்குடன் வைத்திருக்க இவைகள் உதவி செய்கிறது. இவைகளை வைத்து எண்ணற்ற அழகு குறிப்புகளும் உள்ளது அதையும் முயற்சி செய்யலாம் தவறில்லை. ஆனால் இப்பொழுது நாம் செய்யும் இந்த பேக்கிற்கு பாலோ தயிரோ தேவை கிடையாது. பிரஷ் கிரீம் வைத்து தான் முகத்திற்கான பேஸ் பேக்கை தயார் செய்யப் போகிறோம். அதை எப்படி செய்வது என்று பார்த்துக் கொள்வோம்.

- Advertisement -

முகத்திற்கான இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்த முதலில் ஒரு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பிரஷ் கிரீம் எடுத்து கொள்ளுங்கள். இது பெரும்பாலும் பால் கடைகளில் கிடைக்கும் நல்ல ஒரு பிராண்டடான கிரீம் வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் நாம் சேர்த்துக் கொள்ளும் இரண்டு பொருள்கள் தேன் மற்றும் பாதாம் பவுடர். இவை இரண்டும் கூட சருமத்திற்கு நல்ல பொலிவையும், பள பளப்பையும் தந்து முகத்திற்கு நல்ல நிறத்தை பல மடங்கு கூட்டி கொடுக்கக் கூடிய தன்மை இந்த பொருள்களுக்கு உண்டு. இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு செய்து கொள்ளுங்கள்.

பிரஷ் கிரீமும், தேனும் கலக்கும் போது அதுவாகவே கிரீம் பதத்திற்கு கிடைத்து விடும். நீங்கள் இந்த பாதாம் பவுடர் சேர்க்கும் போது நல்ல பைன் பவுடராக சேர்த்துக் கொள்ளுங்கள் கொஞ்சம் கூட கொரகொரப்பாக இருக்கக் கூடாது. ஒரு வேலை நீங்கள் அப்படி அரைக்கவில்லை என்றால் ஜலித் எடுத்த பிறகு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மூன்றையும் நன்றாக கலந்த பிறகு, உங்கள் முகத்தில் தேய்த்து ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு எப்பொழுதும் போல் உங்கள் முகத்தை அலம்பி விடுங்கள் போதும்.தினமும் இதை செய்து வரும் பொழுது உங்களின் முக அழகை கண்டு உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அந்த அளவிற்கு இதன் ரிசல்ட் நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 30 வருடங்களாக முகத்தில் நிரந்தரமாக இருக்கும் முகப்பருவை கூட மூன்றே நாட்களில் மறைய செய்ய சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருள் போதுமே.

இதில் முகத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த பொருளும் சேர்க்கவில்லை எனவே எல்லா வயதினரும் இதை தாராளமாக பயன்படுத்தலாம் நீங்களும் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -