உங்க முகத்தில் இனி முகப்பருவை தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. முகப்பருவை முற்றிலுமாக போக்க இந்த ஒரு பேக் போதுமே.

veppilai-pimple
- Advertisement -

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு இந்த முகப்பரு பிரச்சனை அதிகமாகவே இருக்கும். சில பேருக்கு முகப்பரு வரும், போகும். ஆனால் முகப்பரு வந்த இடத்தில் தழும்பு நிரந்தரமாக தங்கிவிடும். அது முகத்திற்கு முழுமையான அழகை கொடுக்காது அல்லவா. முகப்பரு வந்த இடத்தில் இருக்கும் தழும்பை போக்கவும், முகப்பருவை வரவிடாமல் தடுக்கவும், இருக்கக் கூடிய முகப்பருவை தழும்பில்லாமல் மறைய செய்யவும் ஒரு சூப்பரான பேக்கை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இந்த பேக்கை பயன்படுத்துவதன் மூலம் முகச்சுருக்கங்களும் நீங்கும். வயதான தோற்றமும் தள்ளிப் போகும். அவ்வளவு சூப்பரான பேக் என்ன என்று உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்குதா வாங்க பார்க்கலாம். இந்த பேக் தயார் செய்ய நமக்கு மொத்தமாக 3 பொருட்கள் தான் தேவை.

- Advertisement -

வேப்பிலை பொடி – 1 டேபிள் ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், 1 முட்டையின் வெள்ளை கரு, இந்த மூன்று பொருட்கள் தேவை. ஒரு சிறிய கிண்ணத்தில் காஃபி துலையும், வேப்பிலை பொடியையும் போட்டு அதை இந்த முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்றாக அடித்து கலக்க வேண்டும். ஒரு பேக் நமக்கு கிடைத்திருக்கும். இதை முகம் கழுத்து பகுதி முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். பேக் நன்றாக காயும் போது முகம் அப்படியே உங்களுக்கு இழுத்து பிடிப்பது போல இருக்கும். காரணம் இதில் முட்டை வெள்ளை கரு சேர்க்கப்பட்டுள்ளது. பேக் போடுவதற்கு முன்பு முகத்தை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். முகத்தில் மேக்கப் இருக்க கூடாது.

முகப்பரு உள்ளவர்கள் இந்த பேக்கை போட்டுவிட்டு, ரொம்பவும் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து முகத்தை கழுவ கூடாது. பேக் மட்டும் போட்டுவிட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை மசாஜ் செய்யாமல் சுத்தமாக கழுவி விடுங்கள். முகப்பரு முகத்தில் இல்லாதவர்கள் இந்த பேக்கை போடலாமா. தாராளமாக போடலாம். முகப்பரு இல்லாதவர்கள் இந்த பேக்கை போடுவதன் மூலம் என்ன பயன்.

- Advertisement -

முகத்தில் எந்த ஒரு முகப்பருவும் உங்களுக்கு காலத்திற்கும் வராது. வெளியில் சென்று வருவதன் மூலம் சருமத்தில் எந்த ஒரு இன்பெக்ஷனும் ஏற்படாமல் உங்களுடைய முகத்தை பாதுகாக்கும். அது மட்டுமல்லாமல் இதில் நாம் முட்டையின் வெள்ளை கரு சேர்த்திருப்பதால் முக சுருக்கத்தை வரவிடாமல் தடுக்கும். முகதில் இருக்கின்ற முகச்சுருக்கமும் நீங்கி உங்களுடைய முகம் படிப்படியாக வெள்ளையாக மாறத் தொடங்கும். முகத்தில் முகப்பரு இல்லாதவர்கள் இந்த பேக்கை 20 நிமிடம் கூட முகத்தில் வைத்துக் கொள்ளலாம். பேக் டிரை ஆனதும், முகத்தை நனைத்து விட்டு நன்றாக மசாஜ் செய்து கழுவலாம். தவறு கிடையாது.

வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் இந்த பேக்கை பயன்படுத்த வேண்டும். மாதத்தில் நான்கு நாட்கள் இந்த பேக்கை தாராளமாக பயன்படுத்தலாம். உங்களுடைய வீட்டின் அருகில் வேப்பமரம் இருந்தால் அந்த இலைகளை எடுத்து காய வைத்து பொடி செய்து பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் பச்சை வேப்பிலையை அரைத்து அந்தச் சாறை மட்டும் எடுத்துக் கூட நாம் வேப்பிலை பொடிக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாது என்பவர்கள் வேப்பிலை பொடியை நாட்டு மருந்து கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் எந்த ப்ரேன்ட் இன்ஸ்டன்ட் காபி பவுடரை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -