முகத்தில் இருக்கும் கருத்திட்டுகள் அனைத்தும் மாயமாய் மறைந்து பொலிவை பெற பாதி தக்காளி பழம் இருந்தால் அதை இப்படி பயன்படுத்துங்கள் போதும். அப்புறம் பாருங்க கருந்திட்டுன்னா என்னன்னு கேப்பீங்க.

face tomato
- Advertisement -

இப்போதெல்லாம் நிறைய பேருக்கு முகத்தில் இந்த கருந்திட்டுகள் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அதிகப்படியான வெயில் நம் மீது படுவது. அது மட்டும் இன்றி முகத்திற்கு தேவையான பராமரிப்பை நாம் தராததும் தான். இதையெல்லாம் செய்யாமல் பொலிவாக இருக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயமாக முடியாது. முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதும், ஆரோக்கியமான உணவுகளை எடுப்பதும், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, சரியான ஓய்வு இப்படி அனைத்துமே இதற்கு முக்கியம்.

அது மட்டுமின்றி சிலர் முகத்தில் இருக்கும் கருந்திட்டுகள் மறைய கடைகளில் இருக்கும் கெமிக்கல் கலந்த கீரம்களை பயன்படுத்துகிறார்கள். முகத்தின் சருமமானது மிகவும் மென்மையானதாக இருக்கும். இதில் நாம் தேவையில்லாமல் கெமிக்கலை அதிகமாக பயன்படுத்தினாலும் இந்த கருத்திட்டு பிரச்சனைகள் வரும். இப்போது இந்த கருந்திட்டுகள் பிரச்சனைக்கு ஒரு சுலபமான தீர்வை தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைய சீரம்:
இந்த சீரத்தை நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை கொண்டு தான் செய்யப் போகிறோம். இதற்கு முதல் மூலப்பொருளாக தக்காளி பழச்சாறை சேர்க்கப் போகிறோம். இதற்கு நல்ல பழுத்த தக்காளியாக எடுத்து அதில் பாதி தக்காளியின் சாறை மட்டும் வடிக்கட்டி ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது தக்காளி பழச்சாறில் ரெண்டு ஸ்பூன் பச்சரிசி மாவை கலந்து கொள்ளுங்கள். இது இரண்டையும் நன்றாக கலந்து விட்ட பிறகு ஒரு டீஸ்பூன் தேனையும் கலந்து மீண்டும் ஒரு முறை இதை நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் ஒரு லிக்விட் பதத்திற்கு வர வேண்டும். அதுவரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சீரம் போடுவதற்கு முன்பாக முகத்தில் உங்கள் முகத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த சீரத்தை ஒரு சிறிய கரண்டியை வைத்து உங்கள் முகம் முழுவதும் தேய்த்த பிறகு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். இதை தேய்த்த பிறகு மசாஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் அரை மணி நேரம் முகத்தில் இருக்க வேண்டும் அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பிய பிறகு துடைத்து விடுங்கள் போதும்.

இந்த சீரத்தை நாம் தினமுமே கூட பயன்படுத்தலாம் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தினாலும் போதும். வெயிலினால் ஏற்படக் கூடிய கருத்திட்டு இதை போட்ட உடனே சரியாகி விடும். நாள்பட்ட கருந்திட்டுகள் இதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது மறைய தொடங்கி முகம் பொலிவாக விடும்.

- Advertisement -

இதில் சேர்த்திருக்கும் தக்காளியானது முகத்தை நல்ல பொலிவுடன் மாற்றக் கூடிய தன்மை உடையது. அதே போல் இதில் இருக்கும் பச்சரிசி மாவு முகத்தில் இருக்கும் கருந்திட்டுகளை மறைய செய்ய உதவி புரியும். தேன் முகத்தை எப்போதும் இளமையாகவும் சுருக்கங்கள் இல்லாமல் பார்க்க அழகாகவும், பளபளப்பாகவும் மாற்றும். இந்த சீரத்தை நாம் பயன்படுத்தும் முன்பு தயார் செய்து போடுவது சிறந்தது.

இதையும் படிக்கலாமே: மூன்றே மாதத்தில், மூன்று மடங்கு முடி வளர்ச்சியை அதிகரிக்க முத்தான இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்.

முகத்தில் கருந்திட்டுகள் இல்லாமல் முகம் ஒரே நிறத்துடன் அழகாக இருக்க இந்த ஒரு சீரம் இருந்தால் போதும். முகம் எப்போதும் பார்க்க பளிச்சென்று இருக்கும். இது முகத்திற்கு மட்டுமில்லாமல் கை, கால், முட்டி, கழுத்து என கருமை படிந்த அனைத்து இடங்களிலும் இந்த சீரத்தை பயன்படுத்தலாம்.

- Advertisement -