முன் ஜென்ம பாவங்கள், முன் ஜென்ம சாபங்கள் தீர சிவன் கோவிலில் நின்று இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

sivan5
- Advertisement -

எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் மனிதராகப் பிறந்து இவ்வளவு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்காத மனிதர்களே இந்த பூலோகத்தில் கிடையாது என்று சொல்லலாம். அவரவர் தகுதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு பிரச்சனை, அவரவருக்கு இருக்கத்தான் செய்கிறது.

கர்ம வினை இல்லாமல் கருவில் நம்மால் உருவாக முடியாது என்று சொல்லுவார்கள். அறிந்து செய்த பாவம், அறியாது செய்த பாவம் எல்லாவற்றிற்கும் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அவருடைய பாதங்களில் சரணாகதி அடைந்து, இந்த எளிமையான சின்ன பரிகாரத்தை செய்தாலே போதும். செய்த பாவத்திற்கு உண்டான தண்டனைகள் குறையும்.

- Advertisement -

செய்த பாவத்திலிருந்து முழுசாக தப்பித்து விட முடியாது. செய்த பாவத்திற்கு உண்டான பலாபலன்களை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் ஏதோ கடவுள் பார்த்து நமக்கு கொஞ்சம் கருணையை காட்டுவார். அதற்கான பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து தெரிந்துகொள் படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கர்ம வினைகள் நீங்க பிரதோஷ நாள் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பிரதோஷ நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவில்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும். அந்த பூஜையில் கலந்து கொள்ளவும். வீட்டிலிருந்து செல்லும்போது ஒரே ஒரு மிளகு கையில் எடுத்துக் கொள்ளுங்கள். சிவனின் பாதங்களில் இருந்து ஒரு வில்வ இலையை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை பார்த்தவாறு நின்று, அந்த ஒரு வில்வ இலையில் ஒரே ஒரு மிளகை வைத்து சுருட்டி சாப்பிட்டு விடுங்கள். அவ்வளவுதான். நீங்கள் செய்த கர்ம வினைகளுக்கு உண்டான தண்டனை குறையும். தெரிந்தே செய்த பாவத்தை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்டால் அதற்கு உண்டான மன்னிப்பும் எம்பெருமானிடம் உங்களுக்கு கிடைத்து விடும்.

இதே போல ரொம்ப நாட்களாக உடம்பில் ஏதோ ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது. மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை என்பவர்களும் பிரதோஷ நாளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுக்கு இருக்கும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வீட்டில் படுத்த படுக்கையிலேயே வயதானவர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

அவர்களுக்கு உடல் நிலையில் ஆரோக்கியம் தேவை என்றாலும் இதே போல வில்வ இலை மிளகை சிவனின் பாதங்களில் வைத்து எடுத்து வந்து அதை பொடி செய்து, அந்த பொடியை தண்ணீரில் கலந்து அவர்களுக்கு கொடுத்தாலும் நோய்கள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: தடைகளையும் துன்பங்களையும் நீக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு.

ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து அவர்களுடைய நாக்கில் தடவி விட்டு விடுங்கள் அவ்வளவுதான். வேற எதுவும் தேவை கிடையாது. தீராத நோய் உடம்பை விட்டு நீங்க, தீராத பாவம் நம்மை விட்டு நீங்க ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் எளிமையான பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -