பதவி உயர்வு, வியாபார விருத்தி, வருமான உயர்வு போன்றவை பெற எளிதாக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன தெரியுமா? சாதாரண இலைக்கு இவ்வளவு சக்தியா?

pooja-room-sivan
- Advertisement -

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு நிச்சயம் இருக்கும். அது அவரவர்களின் வயதிற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக் கொண்டே வரும். லட்சியத்தை நோக்கிய பாதையில் நாம் வெற்றி பெற வேண்டும் எனில் இறை அருள் நிச்சயம் தேவை. அந்த இறையருளைப் பெறுவதற்கு நாம் எப்போதும் தன்னிலை மாறாமல் தெய்வீக ஈர்ப்புடன் இருந்து வருவது மிக முக்கியம். நம் வாழ்வில் ஏற்றம் பெற, பதவி உயர்வு, வியாபார விருத்தி, வருமான உயர்வு போன்ற சலுகைகளை பெறுவதற்கு இறைவனிடத்தில் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் தான் என்ன? என்பதை தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணித்து தெரிந்து கொள்வோம்.

praying-gopuram

குழந்தையாக இருக்கும் பொழுது பெற்றோர்களைப் பார்த்து வளரும் தருவாயில் அந்தக் குழந்தை, தான் பெரிதாக வளர வேண்டும் என்கிற இலக்கை வைத்திருக்கும். கொஞ்சம் பெரிதாக வளர்ந்த பின்பு பள்ளிக்கூடத்தில் தான் மற்றவர்களைப் போல முதல் மாணவனாகத் திகழ வேண்டும் என்கிற இலக்கை வைத்திருப்பான். இளம் வயது அடையும் பொழுது நன்கு படித்து பட்டதாரியாகி, நல்ல வேலையில் நாமும் அமர வேண்டும், யாருக்கும் கைகட்டி வேலை பார்க்க கூடாது என்கிற உத்வேகம் இருக்கும்.

- Advertisement -

வேலைக்கு சென்ற பிறகு வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்கிற இலக்கு இருக்கும். இப்படி தொடர்ந்து ஏதாவது இலக்கை நோக்கி மனிதன் பயணித்துக் கொண்டே இருப்பான். குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்று நீங்கள் எந்த தரப்பினராக இருந்தாலும் உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் நீங்கள் ஏற்றம் பெறுவதற்கு உங்களுக்கு இறையருள் நிச்சயம் தேவை. இந்த இறையருளை எளிதாகப் பெறுவதற்கு உரிய பரிகாரத்தை தான் பார்க்க இருக்கிறோம்.

sun1

லட்சியத்தை அடைய, வாழ்வில் ஏற்றம் பெற, பதவி உயர்வு பெற சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ள வேண்டும். சூரிய உதயத்தை உங்கள் கண்களால் காண வேண்டும். எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு, சுத்தமாக நீராடி விட வேண்டும். பின்பு அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விபூதி இட்டுக் கொண்டு சிவனுக்கு தினமும் வில்வ அர்ச்சனை செய்யுங்கள்.

- Advertisement -

இப்படி செய்யும் பொழுது நவ கிரக தோஷங்கள் விலகி உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. விஷ்ணு பக்தர்கள் ஆக இருப்பவர்கள் அருகிலிருக்கும் விஷ்ணு கோவிலுக்கு சென்று அங்கு உள்ள மூலவருக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யலாம் அல்லது வீட்டிலேயே பெருமாளுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யுங்கள்! அவரவர் வழக்கப்படி இஷ்ட தெய்வத்திற்கு சக்தி வாய்ந்த இந்த இலைகளை கொண்டு காலையிலேயே அர்ச்சனை செய்யும் பொழுது எண்ணிய எண்ணம் எல்லாம் எண்ணியபடி ஈடேறும்.

lingam-vilva-archanai

குறிப்பாக தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றி பெறுவதற்கு இந்த எளிய பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு துணையாக இருக்கும். மேலும் சூரிய பகவானுடைய ஆசீர்வாதம் இருக்கும் பொழுது உங்களுக்கு எண்ணிய எண்ணத்தில் எந்த விதமான இடையூறுகளும் ஏற்படாது. மற்றவர்கள் உங்களை திசை திருப்பி விட நினைத்தாலும் உங்கள் பாதையில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு தான் சூரிய அருள் தேவை. எனவே சூரிய உதயத்தை தரிசனம் செய்த பின்பு, இஷ்ட தெய்வத்திற்கு சக்தி வாய்ந்த இலைகளை கொண்டு அர்ச்சித்து வாருங்கள் ஏற்றம் நிச்சயம் பெறலாம்.

- Advertisement -