தோல்வியில் இருந்து மீள்வதற்கு, வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 1 மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் போதும்.

murugan-om
- Advertisement -

சிலருக்கு எல்லா விதத்திலும் சறுக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அது தொழில், வியாபாரம், கல்வி, வேலை என்று எந்த விஷயமாக இருந்தாலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் பொழுது மனதில் மிஞ்சி இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும். அதுபோல் நம்பிக்கை இழக்கும் பொழுது வாழ்க்கையில் விரக்தி உண்டாகும். உங்களுக்கு தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டே இருந்தால் மிகப்பெரிய சாதனையை நீங்கள் புரிய போகிறீர்கள் என்பது தான் அதன் அர்த்தம். எப்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்து ஒருவருக்கு தோல்விகள் வந்து கொண்டு இருக்கிறதோ அப்பொழுது அவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை உயர வேண்டும். அது சற்று கடினமான காரியம் தான். ஆனால் முடியாதது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது போன்ற தருவாயில் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். அது என்ன மந்திரம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் உங்கள் தொழிலில் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அதிலிருந்து விரைவில் நீங்கள் நிவாரணம் பெற முடியும். உங்கள் தொழிலில் மாறாக நீங்கள் தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்தாலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கலாம்.

- Advertisement -

தொழில் மட்டுமல்ல, வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும் பொழுதும், வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வியாபார விருத்தி ஏற்படும் பொழுதும், இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்தால் மேலும் மேலும் செழித்து முன்னேற்றமடையும்.

Murugan_ Swamimalai

தொழில், வியாபாரம் செய்பவர்கள் மட்டும்தான் உச்சரிக்க வேண்டும் என்று இல்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படும் பொழுது அதை திறம்பட செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள். அதுபோன்ற சமயத்தில் இந்த மந்திரம் நிச்சயம் உங்களுக்கு துணையாக இருக்கும்.

- Advertisement -

இதோ அந்த மந்திரம்:
ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம!

குழந்தைகள், மாணவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், கூடுதல் பலமும் நிச்சயம் கிடைக்கும். முருகனின் மூல மந்திரமான இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை உச்சரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்ன தேவையோ அது உடனே கிடைக்கும். முருகரின் அருட்கொடை பெற இந்த மந்திரத்தை தக்க சமயத்தில் தியான நிலையில் அமர்ந்து அமைதியாக 108 முறை மனதை ஒருமுகப்படுத்தி உச்சரித்து பயன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வாழ்க்கையில், வெற்றி நிரந்தரமாக இருக்க, எந்த கடவுளை, எந்த மந்திரத்தைச் சொல்லி, எந்த கிழமையில் வழிபட வேண்டும்?

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -