பங்குனி உத்திர தீப வழிபாடு

murugan5
- Advertisement -

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஆறுமுகனைக் கும்பிட்டால் தினம் தினம் உங்களுக்கு வாழ்க்கையில் ஏறு முகம் தான். அப்படி இந்த ஆறுமுகனுக்கே சொந்தமான பங்குனி உத்திர விசேஷம் நாளைய தினம் வரவிருகின்றது. இந்த தினத்தில் அந்த ஆறுமுகனுக்கு இருக்கக்கூடிய 12 கரங்களில் இருந்தும் முழுமையாக ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்றால் நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பங்குனி உத்திரம் 12 தீப வழிபாடு

தமிழ் மாதத்தில் 12 வது மாதம் பங்குனி. நட்சத்திரத்தில் 12வது நட்சத்திரம் உத்திரம். பங்குனி மாதம் 12ஆம் தேதியே இந்த சிறப்பு வாய்ந்த நாள் வந்திருக்கின்றது. கேட்கவா வேண்டும். முருகப்பெருமானை வழிபாடு செய்ய இப்படிப்பட்ட அற்புதம் வாய்ந்த திருநாளை தந்ததற்கு இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. இந்த பங்குனி உத்திர நாளில் முருகப்பெருமானின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தொடர்ந்து பார்த்து விடுவோம்.

- Advertisement -

நாளைய தினம் காலை 11:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்திருக்க வேண்டும். குறிப்பாக நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தை இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு தேவையான பொருட்களை இன்றே வாங்கி வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து, அரளிப்பூ போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு 12 வெற்றிலைகள் தேவை. 12 மண் அகல்விளக்குகள் தேவை.

விளக்கில் ஊற்றுவதற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் உங்கள் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளுங்கள். பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பாக இந்த 12 வெற்றிலைகளை உங்கள் சௌகரியம் போல அடுக்கி வையுங்கள். வெற்றிலைக்கு மேலே மஞ்சள் குங்குமத்தை வைத்து ஒவ்வொரு மண் அகல் விளக்கை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

நாளைய தினம் முடிந்தால் பச்சரிசி மாவில் நட்சத்திர கோலம் போட்டு ஓம் சரவணபவ என்று பூஜை அறையில் எழுதுவோம். 12 துண்டு வெள்ளை சீட்டு எடுத்துக்கோங்க. 12 வெள்ளை பேப்பர். சின்ன சின்ன காகிதங்கள் போதும். அதில் உங்களுடைய பிரச்சனையை எழுத வேண்டும். 12 துண்டு காகிதத்திலும் ஒவ்வொரு முறை உங்கள் பிரச்சினையை எழுதி, ஒவ்வொரு வெற்றிலைக்கு அடியில் வைத்து விட்டு, முருகப் பெருமானை மனமுருகி அந்த பிரச்சினையை தீர்த்து தரும் படி கேளுங்கள்.

முருகா முருகா என்று உருகி வேண்டுங்கள். உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு வேண்டுங்கள். 12 பேப்பரிலும் ஒரே வேண்டுகோள் தான் எழுதப்பட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு நெய்வேதியம் பிரசாதமாக வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நாளைய தினம் 12 விளக்கு ஏற்றி முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு, அந்த முருகப்பெருமானின் 12 கரங்களால் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. உங்களுக்கு முருகப்பெருமானின் 12 கரங்களால் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றால் நாளைய தினம் தவறாமல் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பண மழை பொழிய தீர்த்த பரிகாரம்

குடும்ப நலனுக்காக இந்த பரிகாரம், முருக பக்தர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. இப்போது முக்கியமாக உங்கள் வாழ்க்கையில் என்ன பிரச்சனை இருக்கிறது அந்த பிரச்சனை தீர இந்த வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயமான அதற்கான தீர்வினை அந்த முருகப்பெருமான் சில நாட்களிலேயே காட்டித் தருவான் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -