வீட்டில் பண மழை பொழிய தீர்த்த பரிகாரம்

murugan4
- Advertisement -

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், நாம எல்லோருக்கும் இப்போது முதலிடத்தில் இருக்கக்கூடிய கஷ்டம் இந்த பணக்கஷ்டம். பணக்கஷ்டம் தீர்ந்து விட்டால் அடுத்தடுத்து வரக்கூடிய பிரச்சினைகளை சுலபமாக சமாளித்து விடலாம் என்று எல்லா மனிதர்களிடத்திலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. பணம்தான் பிரதானமான பிரச்சினையாக இன்று நாம் பார்க்கின்றோம்.

இந்த பண தேவையை பூர்த்தி செய்து கொள்ள, வீட்டில் இருக்கும் வறுமையை நீக்க நாளைய தினம் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்றைய தினம் (24-03-2024) பங்குனி மாதத்தில் பௌர்ணமி திதி இருக்கின்றது. நாளைய தினம் உத்திர நட்சத்திரத்தோடு இந்த பௌர்ணமி திதியும் சேரப் போகின்றது.

- Advertisement -

அற்புதமான முருகர் வழிபாட்டிற்கு சிவன் வழிபாட்டிற்கு உகந்த நாள் இது. இந்த நாளில் மகாலட்சுமியை நினைத்து நாம் செய்யக்கூடிய இந்த பரிகாரம் நம் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை நீக்கும். அது என்ன பரிகாரம் பார்த்து விடுவோமா.

பணமழை பொழிய பரிகாரம்

இன்று இரவே பௌர்ணமி நிலவு ஒளியில் ஒரு டம்ளர் தண்ணீரை ஐந்து நிமிடம் வைத்து விடுங்கள். அந்த சந்திரனின் கதிர்வீச்சு இந்த தண்ணீரில் இறங்கட்டும். ஒரு சொம்பு தண்ணீர் கூட வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம் அந்த தண்ணீரில் கொஞ்சமாக மஞ்சள் தூள், ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் வசம்பு, அன்னாசிப்பூ, பச்சை கற்பூரம், செவ்வரளி பூ, இந்த பொருட்களை எல்லாம் முருகனையும் மகாலட்சுமியும் நினைத்து போட்டு, இந்த தண்ணீர் பாத்திரத்தை அப்படியே உள்ளங்கைகளில் வைத்து மனம் உருகி உங்கள் வீட்டில் இருக்கும் பண கஷ்டம் தீரனும், கடன் சுமை குறையனும், என்று பிரார்த்தனை வைக்கணும்.

- Advertisement -

இன்று இரவே இந்த திட்டத்தை தயார் செய்து அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பொருட்களில் ஒரு சில வீடுகளில், சில பொருட்கள் இருக்காது. அதாவது ஜாதிக்காய், வசம்பு இதெல்லாம் உங்களுடைய வீட்டில் இல்லை என்றால் பரவாயில்லை. அந்த பொருளை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் வாசம் நிறைந்த, மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களை மட்டும் அந்த தீர்த்தத்தில் போடலாம். தவறு கிடையாது.

மஞ்சள் பொடி ஏலக்காய் கிராம்பு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் அந்த தண்ணீரில் போடும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களை எல்லாம் கடையிலிருந்து வாங்கி வந்து போட முடியும் என்றால் போடுங்கள். இல்லை என்றால் அதை தவிர்த்துக் கொள்ளலாம். எந்த தவறும் இல்லை. இந்த தண்ணீரை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இரவு முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்தவுடனேயே பல் தேய்த்து முகம் கை கால்களை மட்டும் கழுவி விட்டு இந்த தண்ணீரை வடிகட்டி தீர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வாசல் தெளிக்கும் தண்ணீரில் இந்த தீர்த்தத்தை கொஞ்சமாக கலந்து வாசல் தெளித்து கோலம் போடுங்கள்.

பிறகு இந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் படும்படி தெளித்து விடுங்கள். முருகப் பெருமானை மனதார நினைச்சுக்கோங்க மகாலட்சுமி மனதார நினைத்து இந்த தீர்த்தத்தை வீட்டில் தெளிக்கவும். வெற்றிலை மாவிலையில் தெரிவியுங்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்றால் கையில் எங்கே தெரிவியுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை பங்குனி உத்திர வழிபாடு

பிறகு வீட்டில் இருப்பவர்கள் குளிக்கின்ற தண்ணீரில் கொஞ்சமாக இந்த தீர்த்தத்தை விட்டு கலந்து, அந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விடுங்கள். அவ்வளவுதான் உங்களை பிடித்த தரித்திரம் எல்லாம் விலகும், வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் குறையும் கடன் சுமை குறையும். செல்வ வளம் மேலும் மேலும் உயரும். நம்பிக்கையின் அடிப்படையில் செய்யக்கூடிய பரிகாரம்தான். இது ஆகவே நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும் அந்த முருகப்பெருமானை வேண்டி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -