நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க அயர்ன் சத்துள்ள இந்த 1 பொடியை சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிடலாமே! ஒருமுறை செய்து வைத்தால் 1 மாதம் ஆனாலும் கெட்டு போகாது.

murungai-keerai-podi1_tamil
- Advertisement -

ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாத இந்த ஒரு ஆரோக்கியமான முருங்கைக்கீரை பொடியை நீங்களும் வீட்டில் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்கள், குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. அடிக்கடி முருங்கைக் கீரையை உணவில் எடுத்துக் கொண்டால் உடல் சோர்வு தட்டாது, நல்ல ஒரு நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கும். ருசியான இந்த முருங்கைக்கீரை பொடியை எப்படி சுலபமாக நாமும் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை – 4 கைப்பிடி அளவு, சமையல் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை – இரண்டு டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தனியா விதைகள் – இரண்டு டேபிள்ஸ்பூன், கருப்பு எள்ளு – ஒரு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – எட்டு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முருங்கைக் கீரை பொடி செய்வதற்கு முதலில் நாலு கைப்பிடி அளவிற்கு நிறைய முருங்கை இலைகளை மட்டும் காம்புகள் இல்லாமல் எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதை உலர்ந்த துணியில் போட்டு பேன் காற்றில் ஒரு மணி நேரம் காய விட்டு விடுங்கள். ஈரப்பதம் முற்றிலும் நீங்கி முருங்கைக்கீரை உலர்ந்து இருக்க வேண்டும்.

பின்னர் மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இவை வறுபட்ட பிறகு சீரகம், தனியா விதைகள், எள்ளு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.

- Advertisement -

பின்பு வரமிளகாய்கள் எட்டில் இருந்து பத்து வரை உங்கள் காரத்திற்கு ஏற்ப காம்பு நீக்கி சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக கால் ஸ்பூன் பெருங்காயம் போட்டு, ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை உதிர்த்து சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
அருமையான இன்ஸ்டன்ட் புடலங்காய் பச்சடி இப்படி செஞ்சி பாருங்க உங்களையும் சமையல் கில்லடின்னு எல்லாரும் பாரட்டுவாங்க!

இப்போது மீண்டும் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உலர வைத்துள்ள முருங்கை இலைகளை போட்டு சுருள வதக்க வேண்டும். இவை வதங்கிய பின்பு இவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு பவுடர் போல அரைத்து எடுத்து வாருங்கள். பின்னர் நன்கு ஆறியதும் ஒரு ஏர் டைட் கண்டைனரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் ஆனாலும் பிரஷ்ஷாக அப்படியே இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் இந்த ரெசிபியை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -