வருவாயில் முதல் செலவாக இதை மட்டும் வாங்கினால் பணக்கஷ்டமே வராது தெரியுமா? சம்பளம் வாங்கியதும் இனி இதை வாங்க மறக்காதீர்கள்!

malli-cash-uppu
- Advertisement -

ஒருவருடைய சுய உழைப்பில் ஈட்டக் கூடிய வருமானத்தில் இருந்து முதல் செலவாக செய்யும் செலவானது பன்மடங்கு வரவை உயர்த்தக்கூடிய சூட்சமங்கள் நிறைந்துள்ள ஒரு விஷயமாகும். கையை நீட்டி சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், சம்பளம் கொடுப்பவர்களாக இருந்தாலும் உங்களுடைய வருமானத்தில் இருந்து மாதா மாதம் முதல் செலவாக நீங்கள் இதை செய்தால் பணகஷ்டம் என்பதே இருக்காதாம். அப்படி என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒருவருடைய வருமானத்திலிருந்து முக்கிய செலவாக நாம் செய்ய வேண்டியது பல விஷயங்கள் இருந்தாலும், முதல் செலவாக நாம் செய்யும் விஷயமே அம்மாதம் முழுவதும் நமக்கு பணக்கஷ்டம் இல்லாமல் வைத்திருக்கும் சூட்சம வழியாகும். இந்த பிரபஞ்சம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு மட்டுமே கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் பண விஷயத்தில் மட்டும் வேண்டும் வேண்டும் என்று பேராசை கொள்ள வேண்டும்.

- Advertisement -

இருப்பதே போதும் என்று மற்ற எல்லா விஷயத்திலும் நினைக்க வேண்டும். ஆனால் பணத்தை ஈட்டுவதில், அதுவும் சுயமாக ஈட்டுவதில் இருப்பதே போதும் என்று நினைக்காமல் உடலில் தெம்பு இருக்கும் பொழுதே மேலும் மேலும் பணத்தை ஈட்ட வேண்டும் என்று ஆசை கொண்டால், அந்த மகாலட்சுமியே உங்களுக்கு வருவாய் கொடுக்கக்கூடிய அத்தனை வழிகளையும் காட்டுவாளாம்.

பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது. பணம் இருப்பவர்கள் அதை மேலும் மேலும் எப்படி பெருக்கலாம்? என்பதை ஆவலோடும், ஆசையோடும் அதன் மீது காதல் கொண்டு செயல்படுத்துகிறார்கள். விடாமுயற்சி செய்கிறார்கள். பல வழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். முக்கியமாக இதை செய்தால் தோல்வி வருமா? நஷ்டம் வருமா? என்றெல்லாம் யோசிப்பதில்லை! துணிந்து அவர்கள் எடுக்கும் முடிவு அவர்களுக்கு மேலும் மேலும் பணத்தை கொடுக்கிறது.

- Advertisement -

ஆனால் ஏழைகள் இருக்கும் பணத்தையும் தொலைத்து விட்டு நிற்பதா? என்று தயங்கி பணத்தை விட்டு தூரமாக செல்கின்றனர். மகாலட்சுமியை விட்டு நீங்கள் தூரமாக செல்ல செல்ல அவர்களின் மீது நீங்கள் விருப்பம் கொள்ளாமல் தள்ளி நிற்கும் பொழுது உங்களிடம் அது சேர்வதில் தயக்கம் காட்டுகிறது எனவே பணத்தின் மீது ஆசை கொள்ளுங்கள். குறுக்கு வழிகளை தேர்ந்தெடுக்காமல் நீங்கள் உங்களுடைய சுய உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டு பணத்தை ஈட்டுவதில் உடலில் வலு இருக்கும் பொழுதே ஆர்வத்தை காட்டினால் எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களுடைய சந்ததிகள் அதனை முழுமையாக அனுபவிப்பார்கள்.

நீங்கள் முதல் சம்பளம் வாங்கியவுடன் அல்லது நீங்கள் உங்களுடைய வருவாயை முதல் செலவாக அம்மாதம் செய்யும் பொழுது உங்களுடைய கைகளாலேயே கடைக்கு சென்று கல் உப்பு பாக்கெட் ஒன்றை வாங்குங்கள். இது மகாலட்சுமியின் இருப்பிடமாக இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் அதனுடன் மல்லிகை பூவையும் உங்களால் முடிந்த மட்டும் வாங்கி வந்து வீட்டில் இருப்பவர்களுக்கும், சுவாமி படத்திற்கும் போட்டு விடுங்கள். வண்டி, வாகனம் வைத்திருப்பவர்கள் அதற்கு கொஞ்சம் மல்லிகை பூ வையுங்கள். இது போல உங்களுடைய வருமானத்தில் முதல் செலவாக உப்பும், மல்லிகை பூவும் வாங்கி இவ்வாறு செய்வதால் அம்மாதம் முழுவதும் வீண் விரயம் ஏற்படாமல் வரவானது வந்து கொண்டே இருக்கும். நீங்கள் பணத்தை ஈட்டக்கூடிய பல்வேறு பாதைகளும் திறக்கப்படுமாம்.

- Advertisement -