இக்கட்டான சூழ்நிலையில் வரக்கூடிய 2 வாய்ப்புகள். இதில் எந்த முடிவை எடுப்பது? முடிவெடுக்க தடுமாறும் போது தெளிவான முடிவைத் தரும் ‘முருங்கை மரம்’.

- Advertisement -

வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இரண்டு வாய்ப்புகள் ஒரே சமயத்தில் நமக்கு வரும். அந்த இரண்டு வாய்ப்புகளில், எந்த வாய்ப்பை நாம் தேர்ந்தெடுப்பது என்ற மனக்குழப்பமும் வந்துவிடும். இரண்டில் எதை தேர்ந்தெடுத்தால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி குறியும் நம்முடைய மனதில் கட்டாயமாக இருக்கும். குழப்பங்கள் நிறைந்த, கேள்விகள் நிறைந்த சூழ்நிலையில் சரியான முடிவை எடுத்து, நம் வாழ்க்கையை சரியான பாதையில் நடத்திச் செல்வது எப்படி.

vinayagar

எடுத்துக்காட்டிற்கு சொந்த தொழில் செய்யலாம் என்று ஆரம்பிப்போம். அப்போது என்று பார்த்து நல்ல இடத்திலிருந்து நல்ல உத்தியோகம் கிடைக்கும். சில பேர் வேலை தேடிக் கொண்டே இருப்பார்கள். இரண்டு நல்ல வேலைகள் ஒரே சமயத்தில் வரும். அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாது. கையில் நிறைய பணம் வைத்திருப்பார்கள். அதில் நிலத்தை வாங்கி போடலாமா. வீடு வாங்கி போடலாமா. தங்க நகைகளை வாங்கலாமா என்ற குழப்பம் இருக்கும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்கள் எப்படி முடிவு எடுப்பீர்கள். தாந்திரீக ரீதியாக இதற்கு ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

முருங்கை இலை. முருங்கை மரத்தின் குச்சி. இது இரண்டும் நமக்கு தேவை. அதாவது கீரையை சமைப்பதற்கு உடைத்துக் கொண்டு வருவோம் அல்லவா அதே மாதிரி சிறிய ஒரு கிளையை முருங்கை மரத்திலிருந்து நம்முடைய வீட்டிற்கு எடுத்து வந்தால் போதும். ஒரு சிறிய பேப்பரில் உங்களுடைய பிரச்சனையை எழுதிக்கொள்ளுங்கள்.

maruthani vidhai

உதாரணத்திற்கு வேலைக்கு செய்யலாமா? நல்ல தொழில் தொடங்கலாமா? என்று எழுதிவிட்டு அதில் முருங்கை இலைகளையும் முருங்கை குச்சியையும் ஒன்றாக வைத்து அந்த பேப்பரை மடித்து உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் வைத்து விடுங்கள். (அப்படி இல்லையென்றால் உங்களால் முடிந்தால் நீங்கள் எழுதிய இந்த சீட்டை, சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி ஏதாவது ஒரு முருங்கை மரத்தில் கட்டியும் விடலாம்.)

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்யும் போது பூதங்களின் கணபதியான விநாயகரை மனதில் நன்றாக வேண்டிக்கொள்ள வேண்டும். இதுதான் மிக மிக முக்கியம். இதை செய்துவிட்டு உங்களுடைய வேலையை நீங்கள் பாருங்கள். எண்ணி 48 நாட்களில் உங்களுடைய குழப்பத்திற்கு நல்ல தீர்வு ஒன்றை, ஏதாவது ஒரு ரூபத்தில் இந்த விநாயகர் காட்டிக் கொடுப்பாராம்.

vethalam

நாம் எண்ணிய எண்ணம் சரியாக ஈடேற, நம்முடைய குழப்பத்திற்கு பதில் கிடைக்க, முருங்கை மரத்திற்கும் விநாயகருக்கும் அப்படி என்னதான் சம்பந்தம். நிச்சயமாக எல்லோருடைய மனதிலும் இந்த கேள்வி எழும் அல்லவா. அதற்கான விடையையும் இப்போது தெரிந்துகொள்வோம். ‘வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

- Advertisement -

murungai-maram

வேதாளம் குடிகொண்டிருக்கும் இடம் தான் அந்த முருங்கை மரம். அந்த முருங்கை மரத்தில் தங்கியிருக்கும் வேதாளம் ஒரு பூத கணம். பூத கணங்களுக்கு எல்லாம் தளபதி விநாயகர். விநாயகரை வேண்டி முருங்கை மரத்திடம் உங்களுடைய வேண்டுதலை நீங்கள் வைத்தால், விநாயகர் உங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வினை கண்டறிய சொல்லி, வேதாளத்திற்கு ஆணையிடுவாரம்.

manjal-pillaiyar1

கண்ணுக்கு தெரியாத வேதாளம் உங்களுடைய பிரச்சனைக்கான பதிலைத் தேடிக் கொண்டுவந்து விநாயகரிடம் சொல்லிவிடும். நாம் வணங்கக்கூடிய பூதங்களின் தளபதியான விநாயகர், நமக்கு அந்த பதிலை ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுவார்.

manjal-pillaiyar

இயல்பாகவே வேதகாலத்திற்கு விடுகதைகளுக்கான கேள்விகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம். விக்ரமாதித்தன் முதுகில் ஏறிக் கொண்ட வேதாளம், விடுகதைக்கான விடையை தெரிந்து கொண்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும் என்ற இந்த கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இதனடிப்படையில் வாழ்க்கையில் விடுகதையாக இருக்கக்கூடிய சில கேள்விகளுக்கு பதிலை கொடுக்கும் சக்தி இந்த வேதாளத்துக்கு உண்டு. இப்போது உங்களுக்கும் புரிகிறதா?

pillaiyar-prayer

இதுதான் இந்த பரிகாரத்தின் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய குழப்பத்திற்கு சரியான விடை தெரிந்தால் எத்தனை சந்தோஷம். முயற்சி செய்து தான் பாருங்கள். நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -