பணம், பதவி, தூக்கும், நிம்மதி, பொன், பொருள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு பின்னால் வர வேண்டுமா? இந்த 1 பொருள் உங்கள் வீட்டிற்குள் வந்தால், இவை அனைத்தும் தானாக உங்கள் பின்னால் வரும்.

money1
- Advertisement -

எப்போதுமே பணம், பெயர், புகழ், பதவி இவைகளை நாம் தேடி அலையக் கூடாது. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நம்முடைய பின்னால் வரவழைக்க வேண்டும். இதற்கு விடாமுயற்சியும் மனவுறுதியும் கட்டாயம் நமக்குத் தேவை. உழைப்போடு சேர்ந்த உண்மையான உயர்வு, நமக்கு கிடைத்து விட்டால் அடுத்தபடியாக தூக்கம், நிம்மதி, மன அமைதி, ஆரோக்கியம் இவைகளெல்லாம் நமக்கு சொந்தமாகிவிடும். குறுக்கு வழியாக பணத்தை சம்பாதித்து பெயர் புகழ் பதவிகளை, சம்பாதித்தால் நம்மிடம் இருக்கும் தூக்கம் மன நிம்மதி சந்தோஷம் இவை அனைத்தும் நம்மை விட்டு சென்றுவிடும். இது இயல்பான ஒன்று. பெரும்பாலும் நம் எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும்.

sucess

முயற்சி செய்தும், அரும்பாடுபட்டு கடின உழைப்பை போட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. பணம் சம்பாதிக்க முடியவில்லை. பெயர்ப்புகள் பதவி பட்டம் என்னை தேடி வரவில்லை என்பவர்கள் பின் வரக்கூடிய தாந்திரீக பரிகாரங்களை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் நேர்வழியில் கிடைக்கும்.

- Advertisement -

ஒரு வீட்டில் அவசியமாக இருக்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் கட்டாயம் இந்த பரிகாரமும் இருக்கவேண்டும். படிகாரம் எந்த ஒரு வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் கஷ்டங்கள் நுழையாது. இந்த அற்புதம் வாய்ந்த மகத்துவம் வாய்ந்த படிகாரத்தை வைத்து தான் இன்று சில சுலபமான, சக்தி வாய்ந்த பரிகாரங்களை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sleep1

படிகாரத்தை உடைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் இந்த படிக்காரத் தூளை கொஞ்சமாகப் போட்டு கலந்து, இந்த டம்பளரை அப்படியே நீங்கள் படுக்கும் அறையில் வைத்து விடுங்கள். தேவையற்ற குழப்பங்கள் உங்களை நெருங்காது. மன நிம்மதியோடு நல்ல தூக்கத்தை பெற முடியும். கெட்ட கனவுகளின் தொந்தரவு எதிர்மறை ஆற்றலின் பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு விடுவீர்கள். மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து உங்கள் வேலையை சுறுசுறுப்பாக தொடங்க இந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். காலை எழுந்ததும் அந்த டம்ளர் தண்ணீரை கொண்டு போய் சிங்கிள் கொட்டிவிட வேண்டும்.

- Advertisement -

இரண்டாவதாக, உங்களுடைய வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவாகவே உள்ளது. வீட்டில் பண கஷ்டம் கடன் சுமை அதிகமாக உள்ளது. வீட்டிற்குள் எந்த சாத்தான் வந்து தங்கி இருக்கிறது என்றே தெரியவில்லை. வீட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சந்தோஷம் ஒரு துளி கூட இல்லை, என்றால் என்ன செய்ய வேண்டும். ஒரு சிறிய துண்டு படிகார கல்லை எடுத்து சிவப்புத் துணியில் கட்டி உங்களுடைய வீட்டு நிலை வாசல் படிக்கும் உள்ளே மாட்டிவிடுங்கள். இந்த படிகாரக்கல் அப்படியே இருக்கட்டும். ஒரு மாதம் கழித்து பழையபடிகார கல்லை தூக்கி உங்கள் வீட்டில் இருந்து தூரமாக கொண்டுபோய் போட்டு விடுங்கள். மீண்டும் புதியதாக படிகார கல்லை கட்டி வையுங்கள். இப்படி மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்தால் வீட்டில் இருக்கும் துர்சக்திகள் அனைத்தும் உங்கள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

padikaram1

மூன்றாவது பரிகாரம். வெள்ளையாக இருக்க கூடிய படிகாரத்தின் மேலே சிவப்பு நிறத்தில் குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு பச்சை நிறத் துணியில் முடிந்து நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட்டால், பணம் பல நல்ல வழிகளில் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

padikaram

நான்காவது பரிகாரம். ஏதாவது முக்கியமான விஷயத்திற்காக வெளியே செல்கிறீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் ஜெயித்து விட்டால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இன்டர்வியூக்கு செல்லும்போதும், காண்ட்ராக்டில் கையெழுத்து இடும்போது, பெரிய பெரிய வேலைகளைத் தொடங்கும் போது, கடன் வாங்கும்போது, கடன் கொடுக்கும்போது இப்படி முக்கியமான வேலைகளுக்கு வெளியே செல்லும் போது ஒரு சிறிய துண்டு படிகாரத்தை ஒரு வெள்ளைத்துணியில் அல்லது வெள்ளை பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லுங்கள் உங்களோடு, நல்ல நேரம் உங்களுடனே வரும். நீங்கள் தொடும் காரியம் அனைத்தும் உங்களுக்கு வெற்றியை தரும். முயற்சி செய்து தான் பாருங்களேன். இந்த சிறிய சிறிய படிகாரத்திற்கு எத்தனை அற்புத சக்திகள் மறைந்துள்ளது என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

- Advertisement -