இந்த பூச்செடி உங்க வீட்ல இருக்கா? வேலை தேடி எங்கயுமே நீங்க அலைய வேண்டாம். கை நிறைய சம்பளத்தோட வேலை உங்க வீடு தேடி வரும்.

pillaiyar-prayer
- Advertisement -

இன்று நம்முடைய உலகம் இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் நிரந்தரமாக, மனதுக்கு பிடித்த, கை நிறைய சம்பளத்தோடு ஒருவருக்கு வேலை கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. பல வருடங்களாக ஒரே கம்பெனியில் வேலை செய்பவர்கள் கூட, வேலையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நிரந்தரமான வேலை இருக்க வேண்டும். கை நிறைய வருமானம் இருக்க வேண்டும். அதே சமயம் வேலையிலும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்கக் கூடாது. இப்படி வேலையில் பல நன்மைகள் உங்களைத் தேடி வர வேண்டுமா. நவகிரகங்களால் உங்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் பின்தொடருகின்றதா. உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல வில்லையா? தொழில் சரியாக நடக்கவில்லையா? எல்லாவற்றையும் சரி செய்ய இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக.

நிரந்தரமான நல்ல வேலை கிடைக்க விநாயகர் வழிபாடு:
அரச மரத்தடி விநாயகரை வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், மாதம்தோறும் வரக்கூடிய நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று செம்பருத்தி பூவை எடுத்துக் கொண்டு போய் உங்கள் கையாலேயே அரச மரத்தடி பிள்ளையாருக்கு வைக்க வேண்டும்.

- Advertisement -

முடிந்தால் காலை 6 மணிக்கு முன்பு அரச மரத்தடி பிள்ளையாருக்கு 3 சொம்பு தண்ணீர் எடுத்து ஊற்றி, அந்த பிள்ளையாருக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, இந்த செம்பருத்தி பூவை உங்கள் கையால் வைத்து இரண்டு மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த அரச மரத்தை மூன்று முறை வலம் வந்து மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். கை நிறைய சம்பளத்தோடு நிரந்தரமாக நல்ல வேலை உங்கள் வீடு தேடி வரும்.

மாதந்தோறும் வரும் உங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று விடாமல் விநாயகருக்கு செம்பருத்திப் பூவை சூட்டி வேண்டுதல் வைக்க, உங்களுடைய வேண்டுதலை அந்த விநாயகர் சீக்கிரமாக நிறைவேற்றி தருவார். நல்ல வேலைக்கு மட்டும் தான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்பது கிடையாது. உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் அது நிறைவேறும்.

- Advertisement -

பரிகாரத்திற்காக நாம், நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று, விநாயகருக்கு செய்யக்கூடிய விஷயம் இது‌. இது அல்லாமல் தினமும் உங்களுடைய வீட்டில் அருகில் செம்பருத்தி பூ செடி இருக்கிறது. செம்பருத்தி பூ கிடைக்கும் என்றால், அந்த பூக்களை எல்லாம் எடுத்து மாலையாக தொடுத்து கொண்டு போய் எந்த நாளில் வேண்டுமென்றாலும் அந்த அரச மரத்தடி விநாயகருக்கு போடலாம். வீட்டில் இருக்கும் விநாயகருக்கு வைக்கலாம் அல்லது வேறு ஏதாவது விநாயகர் கோவில் இருந்தாலும் அந்த செம்பருத்தி பூக்களை கொண்டு போய் கொடுக்க உங்களுடைய வாழ்வில் செல்வ வளம் பெருகிக்கொண்டே செல்லும். செம்பருத்திப் பூவுக்கு அத்தனை மகத்துவம்.

இதையும் படிக்கலாமே: ஒரு சின்ன துண்டு பிரண்டை இருந்தால் போதும். எட்டு திக்கில் இருந்து வரும் பிரச்சனைகளை எல்லாம், எளிமையாக சமாளித்து விடலாம்.

இந்த ஒரு சின்ன விஷயத்தை தொடர்ந்து செய்து தான் பாருங்களேன். வாழ்வில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அல்லாமல், உங்களுடைய மனது சம்பந்தப்பட்ட குழப்பங்கள் பிரச்சனைகளுக்கு கூட ஒரு நல்ல தீர்வை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும். காலை 6 மணிக்கு முன்பாக அரச மரத்துக்கு அடியில் போய் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியமும் சீர்பெறும் என்ற இந்த தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -