ஒரு சின்ன துண்டு பிரண்டை இருந்தால் போதும். எட்டு திக்கில் இருந்து வரும் பிரச்சனைகளை எல்லாம், எளிமையாக சமாளித்து விடலாம்.

sivan
- Advertisement -

மனிதனுக்கு பிரச்சனை எந்த ரூபத்தில், எந்த இடத்தில் இருந்து திடீரென வரும் என்று யாராலும் சொல்லவே முடியாது. பிரச்சனைகள் வரும்போது அதை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். வேறு வழி கிடையாது. பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடுபவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு மன தைரியம் ஒரு மனிதனுக்கு நிச்சயம் இருக்க வேண்டும். அந்த தைரியத்தை கொண்டு வந்து, நம் வாழ்க்கையில் வரும் தீய வினைகளை அழிப்பதற்காகத்தான் இன்றைக்கு ஒரு சக்தி வாய்ந்த தாந்திரீக பரிகாரத்தை பார்க்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த, இந்த தாந்திரீக பரிகாரத்தை சித்தர்கள் நமக்கு அருளியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நிறைய மருத்துவ குணநலன்கள் கொண்ட இந்த பிரண்டைக்கு, மகத்துவமும் அதிகம். அந்த மகத்துவம் தான் இந்த தாந்திரீக பரிகாரத்தில் செயல்பட போகின்றது. பெரும்பாலும் நிறைய பேர் இந்த பிரண்டை செடியை வீட்டில் வைத்து வளர்ப்பார்கள். பிரண்டையை வீட்டில் வைத்து வளர்ப்பதும், வீட்டிற்கு நன்மை தரக்கூடிய ஒரு விஷயமாகத்தான் அமையும். மூட்டு வலியை மட்டுமல்ல, உங்களுடைய முன் ஜென்ம வினைகளையும் பொசுக்கக் கூடிய சக்தி இந்த பிரண்டைக்கு உண்டு.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்திற்கு சிறிய துண்டு பிரண்டை நமக்கு கட்டாயம் தேவை. எடுத்த பிரண்டையை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவு பிரண்டு இருந்தால் போதும். அந்த பிரண்டையின் வாசம் நீங்கள் சுவாசிக்கும் போது உங்களுடைய மூச்சில் கலக்க வேண்டும். அந்த அளவுக்கு பிரண்டையை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

பிரச்சனைகளை தீர்க்கும் பிரண்டை பரிகாரம்:
நறுக்கிய இந்த பிரண்டைகளை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிழக்கு பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முன்பு ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அதன் பக்கத்தில் இந்த பிரண்டையை வைத்துவிட்டு, அந்த மண் அகல் விளக்கை பார்த்தபடி ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

எம்பெருமானின் வேறு மந்திரங்களை வேண்டும் என்றாலும் நீங்கள் உச்சரிக்கலாம். சிவாய நம, நம சிவாய, சிவ சிவ, அல்லது வெறும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தாலும் அது உங்களுடைய சகோதரியும். அல்லது உங்களுக்கு வேறு ஏதாவது இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும், அந்த இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லி மந்திரத்தை உச்சரிக்கலாம். (அந்த பிரண்டையிலிருந்து வெளிவரக்கூடிய வாசத்தை சுவாசித்து சொல்லக்கூடிய மந்திரத்திற்கு ஒரு தனி சக்தியே இருக்கும்.) எத்தனை முறை வேண்டும் என்றாலும் மந்திரத்தை சொல்லலாம் கணக்கு கிடையாது.

இப்படி பிரண்டை விளக்கு ஏற்றி வைத்து மந்திரத்தை உச்சரிக்க, அந்த மந்திரம் நமக்கு சீக்கிரம் சித்தி ஆகிவிடும். வாரத்தில் இரண்டு நாள் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்யலாம். முதல் நாள் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறீர்களோ தொடர்ந்து அந்த மந்திரத்தை தான் மீண்டும் மீண்டும் உச்சரித்து வர வேண்டும். தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி தான் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இழந்த சொத்துக்கள் அனைத்தும் திரும்ப பெறவும், கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாவும், இந்த திதியை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். வரவே வராது என்று நினைத்த சொத்து கூட உங்களை தேடி வரும்.

நான்கு திசையில் இருந்தும், எட்டு திக்கில் இருந்தும் கஷ்டங்கள் உங்களை நோக்கி வரும் தருணத்தில் கூட அந்த கஷ்டத்திலிருந்து வெளிவரக்கூடிய வழியினை அந்த எம்பெருமான் உங்களுக்கு காட்டிக் கொடுப்பான். இந்த பிரபஞ்சம் நேர்மறையாக உங்களுடைய வாழ்க்கையில் செயல்பட தொடங்கிவிடும். இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய உடம்பிலும் மனதிலும் ஏற்படக்கூடிய மாற்றத்தை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத நல்லது எல்லாம் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் இந்த கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -