நல்லது நடக்க ஏஞ்சல் நம்பர்

number
- Advertisement -

எல்லா ஆன்மீகம் சார்ந்த பரிகாரமும் நம்பிக்கை இருந்தால் மட்டும்தான் பலிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த அதிர்ஷ்டம் தரக்கூடிய பரிகாரத்தை நம்பிக்கையே இல்லாமல் நீங்கள் செய்தாலும் பலிக்கும். ஒரு ஏஞ்சல் நம்பரை வைத்து இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நம்பரை நீங்கள் பயன்படுத்தினால் வாழ்க்கையில் உங்களுக்கு நடக்காத நல்லது எல்லாம், மூன்றை நாட்களில் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மூன்றே நாட்களில் நல்லதா? நம்பர் தானே எழுதி தான் பார்ப்போமே. என்ன அதிசயம் நடக்கிறது என்று மூன்று நாட்கள் கழித்து உங்களுக்கு நடந்த அதிசயத்தை மறக்காமல் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லோருக்கும் இந்த பதிவு பயனுள்ளபடி அமையும்.

- Advertisement -

நல்லது நடக்க ஏஞ்சல் நம்பர்

ஒரு பேப்பர் அல்லது நோட்டு, டைரி எது வேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள். கோடு போட்டது, கோடு போடாதது எந்த பேப்பரை வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். முதலில் பிள்ளையார் சுழி போட்டுக்கோங்க. பிறகு உங்களுக்கு என்ன நல்லது நடக்க வேண்டும், அந்த நல்லது உங்களுக்கு நடந்து விட்டதாக கற்பனை செய்து, அந்த பேப்பரில் எழுத வேண்டும்.

உதாரணத்திற்கு நல்ல வேலை கைநிறைய சம்பாத்தியத்தோடு கிடைக்க வேண்டும் என்று முயற்சி கொண்டிருக்கிறீர்கள். அந்த பேப்பரில் எனக்கு மாதம் 50,000 சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்துவிட்டது என்று எழுதி விடுங்கள். பிறகு அந்த பேப்பருக்கு கீழே 33 முறை ‘369’ இந்த நம்பரை எழுதி விட வேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று, என்று எண்களை போட்டு வரிசைப்படுத்தி எழுதி கொள்ளலாம். தவறு கிடையாது. முதல் நாள் பேப்பரில் உங்களுடைய கோரிக்கை நிறைவேறிவிட்டதாக எழுதி கீழே 33 முறை இந்த நம்பரை எழுதி விட்டீர்கள்.

- Advertisement -

இரண்டாவது நாள், அந்த பேப்பரின் அடுத்த பக்கத்தில் 33 முறை இந்த நம்பரை மட்டும் எழுதினால் போதும். மூன்றாவது நாள், 33 முறை இந்த நம்பரை மட்டும் எழுதினால் போதும். உங்கள் மனசுக்குள்ளேயே நல்ல வேலை கிடைத்துவிட்டது, கை நிறைய சம்பளம் வாங்கி சந்தோஷமாக வாழுகின்றேன் என்று நினைத்து இந்த நம்பரை எழுதுங்க அவ்வளவுதான் பரிகாரம்.

மூன்று நாட்கள் மட்டும்தான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும். எழுதிய இந்த பேப்பரை மடித்து ஏதாவது புத்தகத்தில் வைத்து பத்திரப்படுத்தி வைத்து விடுங்கள் அவ்வளவுதான். நீங்கள் இந்த பேப்பரில் எழுதிய நல்லது நிச்சயம் நடக்கும் என்று நம்புங்கள். ஏஞ்சல் நம்பரை நம்பச் சொல்லவில்லை. . உங்கள் மனதில் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்புங்கள்.

- Advertisement -

ஒரு சில நாட்களில் நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை. சில பேருக்கு மூன்று நாட்களுக்குள்ளாகவே இந்த ஏஞ்சல் நம்பர், கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை நம்பிக்கையோடு எழுதுங்கள் என்று யாரும் சொல்லவில்லை.

இதையும் படிக்கலாமே: குழந்தை நன்றாக படிக்க வழிபாடு

போன போக்கில் ஒரு பேப்பரை எடுத்து ஐந்து நிமிடம் செலவு செய்து இதை எழுதப் போறீங்க. பிறகு நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள். வேண்டிய கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி தரும், ஆன்மீகம் சொல்லும் இந்த ஏஞ்சல் நம்பர் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ள படி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -