ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை சுற்றி இப்படி தூக்கி போட்டால் போதும். உங்களைப் பிடித்த பீடை உடனடியாக விலகும். எல்லா நல்லதும் உங்களை தேடி வரும்.

sad-lemon
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு வாழ்க்கையில் நிறைய தடைகள் வரும். நல்ல வேலை கிடைப்பது போல இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் கை நழுவிச் செல்லும். நல்ல வாய்ப்புகள் வீட்டு வாசல் வரை வரும். ஆனால், நம் வீட்டிற்குள் வராது. கடைசி சமயத்தில் எல்லாம் கை நழுவிப் போய்விடும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் உங்களுக்கு வருவதற்கு காரணம் உங்களை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி தான். இந்த நெகட்டிவ் எனர்ஜியை உடைக்க எலுமிச்சை பழத்தை வைத்து ஒரு சுலபமான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இதை செய்தால் நிச்சயமாக வாழ்க்கையில் உங்களுக்கு வரும் கஷ்டங்கள் அனைத்தும் உடைத்தெறியப்படும். வாழ்க்கையின் நல்லது மட்டுமே நடக்க தொடங்கும்.

இந்த பரிகாரத்திற்க்கு நமக்கு தேவையான பொருள் 1 எலுமிச்சம்பழம். ஒரே ஒரு கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம்பழத்தை பேரம் பேசாமல் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டின் அருகில் 4 சந்து உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும். அந்த நான்கு சந்திருக்கும் நடுவே கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு ஒரு எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு, வலமிருந்து இடமாக உங்கள் தலையை 13 மூன்று முறை சுற்ற வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு இந்த எலுமிச்சம்பழத்தை கத்தியைக் கொண்டு நான்காக வெட்டி, முதலில் ஒரு துண்டை உங்களுக்கு முன்னால் தூக்கி எறிய வேண்டும். இரண்டாவது துண்டை பின்பக்கம் தூக்கி எறியவேண்டும். மூன்றாவது துண்டை வலது பக்கம், நான்காவது துண்டை இடது பக்கம் தூக்கி எறிந்து விடுங்கள். இந்த எலுமிச்சம் பழத் துண்டுகளை வீசி எறிந்து விட்டு, திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

இதே போல ஏழு நாட்கள் செய்ய வேண்டும். முதல் நாள் இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் செய்ய தொடங்கினார்களோ, அடுத்து வரக்கூடிய ஏழு நாட்களும் அதே நேரத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்களுடைய வீதியில் ஆள் நடமாட்டம் இருக்கும். இந்த பரிகாரத்தை செய்ய முடியாது என்றால் இரவு நேரம் எல்லோரும் தூங்க சென்ற பின்பு 10 மணிக்கு மேல் கூட இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

குலதெய்வத்தை வேண்டிக் கொண்ட இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். இதுவரைக்கும் எனக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்க வில்லை என்று சொல்லுபவர்களுக்கு கூட இந்த பரிகாரம் கைகொடுக்கும்.

7 நாட்களும் இந்த பரிகாரத்தை, 4 சந்து இணையும் இடத்தில் செய்து விட்டு, வீட்டிற்கு வந்து நேராக குளியலறையில் முகம் கை கால்களை கழுவிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் விட்டு ஒருநாள் செய்வதன்மூலம் பரிகாரத்திற்கு பலன் இருக்காது. மூன்று நாள் பரிகாரத்தை செய்துவிட்டீர்கள். நடுவில் ஒருநாள் இந்த பரிகாரம் செய்ய தவறி விட்டால், மீண்டும் பரிகாரத்தை தொடங்கினால், மீண்டும் தொடர்ந்து 7 நாட்கள் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் முழு பலனை பெற முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -