நந்தி தேவரின் காதில் நாம் எதை எப்படி முறையாக சொன்னால் நமது அனைத்து கஷ்டங்களும் தீருவதோடு வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் தெரியுமா?

- Advertisement -

நந்தி வழிபாடு செய்வது எப்படி?

சிவனுக்குரிய வாகனமாக திகழும் நந்தி தேவரே கைலாய மலையின் நுழைவாயில் பாதுகாவலாராகவும் இருக்கார் என்கிறது புராணங்கள். எந்நேரமும் சிவத்தை தவிர வேறெதையும் அறியதா நந்தி பகவானுக்கு எப்போதும் சிவாலயங்களில் தனி சிறப்பு உண்டு. இப்படி பட்ட நந்தி தேவரின் காதில் நாம் நமது குறைகளை கூறி வழிபடுவது வழக்கம். ஆனால் அந்த குறைகளை கூறுவதற்கும், நமது வேண்டுதல் நிறைவேறிய பிறகு அவரை வழிபடுவதற்கும் சில முறைகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

“சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி, சேவித்த பக்தர்களை காக்கும் நந்தி” என்ற பாட்டிற்கு இணங்க நந்தியம் பெருமானுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அவரிடம் நாம் எந்த கோரிக்கைகள் வைத்தாலும் அந்த கோரிக்கைகள் சிவபெருமானிடம் வைத்ததற்கு சமமாக கருதப்படுகிறது. மேலும் அவரின் அனுமதி இன்றி சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்காது என்பது புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

எந்நேரமும் சிவனையே தரிசனம் செய்து கொண்டு, அவர் நாமத்தையே மூச்சுக்காற்றாக வெளியிட்டுக் கொண்டு இருப்பதால்தான் சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடுவில் குறுக்கே செல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நந்தியை எப்படி முறையாக வழிபட்டு பலனை பெறலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

நந்தி வழிபாடு

சிவாலயங்களுக்கு செல்லும் பொழுது சிவனை தரிசிப்பதற்கு முன்பாக நந்தியை வழிபட்டு அவரிடம் அனுமதி பெற்ற பிறகு சிவபெருமானை நாம் தரிசிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். எந்த நேரத்திலும் நாம் நந்தி தேவரை வழிபடலாம். ஆனாலும் அவருக்கு சிறப்பாக கருதப்படுவது பிரதோஷ நேரம் ஆகும்.

- Advertisement -

பிரதோஷத்தன்று நாம் நந்தி தேவருக்கு நம்மால் இயன்ற அளவு அபிஷேகத்திற்கான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். மேலும் நந்தி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து அவரை மனதார நினைத்து அவருடைய வலது காதில் “சிவாய நமஹ நமசிவாய நமசிவாய நமசிவாய” என்று கூறிய பிறகு நம்முடைய நியாயமான கோரிக்கைகளை அவரிடம் கூற வேண்டும். பிறகு மறுபடியும் “சிவாய நமஹ நமசிவாய நமசிவாய நமசிவாய” என்று கூறி முடிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் நந்தி தேவரிடம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நந்தி தேவர் சிவபெருமானிடம் கூறி நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் நந்திதேவருக்கு சிவப்பரிசி, வெல்லம், தேங்காய் சேர்த்த நெய்வேத்தியம் மிகவும் பிடிக்கும் என்பதால் நம்முடைய கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு அவருக்கு இந்த நெய்வேத்தியத்தை வைத்து மனதார நன்றி சொல்லி பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும்.

நந்தி தேவருக்கு நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சிவபெருமானுக்கு செய்ததாக கருதப்படுகிறது. ஆகையால் சிறப்பு வாய்ந்த நந்தி தேவரை, நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது பயபக்தியுடன் வேண்டி அவரிடம் அனுமதி வாங்கி சிவபெருமான் அருளை பெற்று அனைத்து கஷ்டங்களில் இருந்தும் விடுபட்டு சந்தோஷமாக வாழலாம்.

- Advertisement -