நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த பொடியை மூன்று முறை மட்டும் இப்படி பயன்படுத்தி வந்தால் போதும் நீங்க நாள் முழுவதும் தேடினாலும் ஒரு நரை முடியை கூட கண்டுபிடிக்கவே முடியாது

hair11
- Advertisement -

இன்றைய காலத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் இந்த நரைமுடி பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. அதிலும் சிறுவயது பிள்ளைகளுக்கு இந்த பிரச்சனை பெருமளவு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள இயற்கையான முறையை கையாண்டால் இளநரை மறைவதுடன் வயதானவர்களுக்கு ஏற்படும் நரை கூட நிரந்தரமாக சரியாகும்.

நரை முடி மறைய இயற்கை முறை:
இந்த நரைமுடி பிரச்சனைக்கு பயன்படுத்த போகும் முக்கியமான பொருள் அனைவருக்கும் தெரிந்த மருதாணி இலை தான். நம் பாட்டி காலத்தில் இருந்தே நரைமுடி பிரச்சனைக்கு பயன்படுத்தி வந்த ஒரு அருமையான முறையைத் தான் இப்போதும் நாம் கொஞ்சம் மாறுப்படுத்தி செய்யப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு ஒரு கைப்பிடி நிறைய மருதாணி இலையை பிரஷ்ஷாக பறித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை பல்ஸ் மோடில் அரைத்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இது நல்ல பேஸ்ட் பதத்திற்கு வரும் போது ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை மட்டும் இதில் சேர்த்து நல்ல பைன் டேஸ்டாக அரைத்து எடுத்து ஒரு பவுலில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் தயாரிக்க மருதாணி இலை கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் மருதாணி இலை பொடி கிடைக்கும் அதை வாங்கிக் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இப்போது அரைத்த இந்த பேஸ்ட்டை முடிகளின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடுங்கள். இது தலையில் ஒரு பேக் போல இருக்க வேண்டும். அந்த அளவிற்கு அதிகமாகவே எடுத்து தேய்த்து விடுங்கள். இந்த பேக் அரை மணி நேரம் உங்கள் தலையில் ஊறினால் போதும் இதில் எலுமிச்சை சாறு கலந்து இருப்பதால் உடனடியாக நரைமுடியின் நிறம் மாறி விடும். அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து தலை முடியை அலசி விடுங்கள்.

- Advertisement -

இந்த மருதாணி பேஸ்ட்டை தலைக்கு தேய்த்து குளித்த பிறகு அடுத்த நாள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அவுரி பொடியை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பொடியிலிருந்து ரெண்டு டேபிள் ஸ்பூன் பவுடரை மட்டும் எடுத்து ஒரு பவுலில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குழைத்துக் கொள்ள வேண்டும். இதையும் மருதாணி பேஸ்ட்டை போல தலைமுடியின் வேர்க்கால்கள், முடி என ஒரு இடம் கூட தெரியாத அளவிற்கு முழுவதுமாக பேக் போட்டுக் கொள்ளுங்கள். இதுவும் அரை மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீர் ஊற்றி முடியை அலசினாலே போதும் இப்போது நாம் சீயக்காய் ஷாம்பு எதையும் பயன்படுத்தக் கூடாது.

அதுமட்டுமின்றி இந்த அவுரி பொடி சேர்க்கும் போது முடி ஈரமாகவும் இருக்கக் கூடாது. எண்ணெய் பிசுபிசுப்புடனும் இருக்கக் கூடாது. முடி நன்றாக காய்ந்து இருந்தால் மட்டுமே இந்த அவரி பொடி நன்றாக வேலை செய்யும். அவுரி பொடியை சேர்த்து தலைக்கு குளித்த பிறகும் இரண்டு நாள் வரை தலைக்கு எண்ணெய்யோ ஷாம்பு பயன்படுத்த கூடாது. தலை முழுவதும் நரை முடி உள்ளவர்கள் மருதாணி இலையை தேய்த்த பிறகு இந்த அவரி பொடி முறையை பயன்படுத்தலாம். லேசான இளநரை அல்லது முடி செம்பட்டையாக மட்டும் தான் உள்ளது என்றால் மருதாணி இலையை போடவே வேண்டாம். அவுரி பொடியை மட்டும் பயன்படுத்தினாலே போதும்.

இதையும் படிக்கலாமே: இந்த மெத்தடை யூஸ் பண்ணி தேங்காய் எண்ணெயை தலையில் ஒரு முறை இப்படி வைத்துப் பாருங்களேன். பிறகு உங்கள் தலையிலிருந்து ஒரு முடி கூட கீழே உதிராது.

நரைமுடியை கருமையாக்கவும், இளநரையை மாற்றவும் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த டை அல்லது ஆயில், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதால் நாளடைவில் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது போன்ற இயற்கையான முறையில் உள்ள குறிப்புகளை பயன்படுத்தினாலே போதும். இந்த பிரச்சனைகள் எல்லாம் விரைவில் நிரந்தரமாகவே சரி ஆகி விடும்.

- Advertisement -