வெள்ளை முடியை, வேரிலிருந்தே நிரந்தரமாக கருப்பாக மாற்ற இந்த 1 காய் போதுமே. வெறும் 7 நாட்களில் மாற்றத்தை பார்த்து நீங்களே நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

narai-mudi
- Advertisement -

நமக்கு வரக்கூடிய நரை முடியில்  இரண்டு வகை உண்டு. ஒன்று இளமையிலேயே வரக்கூடிய இளநரை. இரண்டாவது 40 வயதிற்கு பிறகு வரக்கூடிய நரைமுடி. இதில் எந்த வகை வெள்ளை முடியாக இருந்தாலும் அதை வேரிலிருந்து கருப்பாக வளர வைக்கக்கூடிய ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் பக்க விளைவுகள் வருவதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு கிடையாது. செயற்கையான முறைகளைப் பின்பற்றி நம்முடைய முடியை என்னதான் கலராக மாற்றினாலும் சரி, வேரிலிருந்து வளரும் போது அந்த முடி வெள்ளையாகத் தான் வளரும்.

hair1

ஆனால் வேரிலிருந்தே முடியை வெள்ளையாக்க கூடிய சக்தி இந்த ஒரு காய்க்கு உண்டு. இந்த எண்ணெயை ஆண்களும் பயன்படுத்தலாம். பெண்களும் பயன்படுத்தலாம். ஆண்களுக்கு சிலபேருக்கு தாடி மீசையெல்லாம் கூட சீக்கிரம் நரைக்க ஆரம்பித்தது விடும். இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களும் இந்த எண்ணெய்யை மீசை தாடியில் தேய்த்து வந்தாலும் அந்த நரை முடி வெள்ளையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

சரி, அந்தக் காய் என்ன, என்பதை பார்த்து விடலாமா? நாம் எல்லோரும் அறிந்த, நம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பீர்க்கங்காய் தான் அந்த காய். முதலில் ஒரு பீர்க்கங்காயை வாங்கி நன்றாக கழுவி சுத்தமாக துடைத்து காய வைத்து விடுங்கள். இதன் மேலே ஈரம் ஒரு துளி கூட இருக்கக் கூடாது.

perthangai

அதன் பின்பு தோலுடன் இந்த பீர்க்கங்காயை மிகவும் பொடியாக நறுக்கி, ஒரு காட்டன் துணியின் மேல் பரவலாக வைத்து நிழலிலேயே உங்களுடைய வீட்டில் ஆற வைக்கவேண்டும். வெயிலில் வைத்து காய வைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் நீங்கிவிடும். பீக்கங்காய் நிழலிலேயே காய்ந்து சுருங்கி வரும் வரை உலர வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மீடியம் சைஸ் பீர்க்கங்காயை வெட்டி உலர வைத்துக் கொண்டால் 200ml அளவு செக்கு தேங்காய் எண்ணெயை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு இடுப்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்த பின்பு, உலர்ந்த பீர்க்கங்காய் துண்டுகளை அதில் போட்டு விடுங்கள். அதன் பின்பு கருஞ்சீரகப் பொடி 1 ஸ்பூன், நெல்லி பொடி 1 ஸ்பூன், வெந்தயப் பொடி 1 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் அந்த எண்ணெயோடு சேர்த்து நன்றாக காயவைத்து அப்படியே அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட வேண்டும்.

pethangai

பீர்க்கங்காயை எண்ணெயில் போட்டு காய் நன்றாக அந்த எண்ணெயில் காய்ந்து கருப்பு நிறம் வந்து சுருங்கிய பின்பு, இறுதியாக அந்த மூன்று பொடியை சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த எண்ணெயானது இரும்பு கடாயில் 4 லிருந்து 5 மணி நேரம் வரை நன்றாக ஆறிய பின்பு, ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

white hair

தேங்காய் எண்ணெயை எப்படி உங்கள் தலைக்கு வைப்பீர்களோ அதே போல் தான் இந்த எண்ணெயையும் தினம்தோறும் வேர்க்கால்களில் படும்படி தடவ வேண்டும். வெளியில் சென்றால் எண்ணெய் வடியும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெயை இரவு நேரத்தில் தலையில் தடவி நன்றாக ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை தலைக்கு குளித்தாலும் சரி இந்த எண்ணெயை பயன்படுத்தினால் உங்களுக்கு ரிசல்ட் 100% உறுதி. தொடர்ந்து பயன்படுத்தி வரவர வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். ஒரு மாதத்தில் நீங்களே நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

இதையும் படிக்கலாமே
இப்படி செய்தால் போதுமே! வாயை சுற்றி உள்ள கருவளையம், பூனை முடி பிரச்சனை ஒரே நாளில் சரியாகிவிடும். உங்க முகம் 10 நிமிஷத்தில அழகா மாறிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -