வாழ்வில் எதையும் சமாளிக்கும் தைரியம் தரும் நரசிம்மர் போற்றி

narasimma-logo-compressed
- Advertisement -

வாழ்வில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களில் பலர் எத்தகைய சூழ்நிலைகளிலும் இறைவனின் மீதான நம்பிக்கையை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கை ஒன்றே மக்களை எத்தகைய சூழ்நிலைகளையும் சந்திக்கும் மனோதிடத்தை தருகின்றது. இத்தகைய மன உறுதி மேலும் பெருகவும், அவர்களின் வாழ்வில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகள் நீக்கவும் ஆன்மீக பெரியோர்களால் இயற்றப்பட்ட ஸ்ரீ நரசிம்மர் 108 போற்றி இதோ.

narasimha 3

நரசிம்மா 108 போற்றி

1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
3. ஓம் யோக நரசிங்கா போற்றி
4. ஓம் ஆழியங்கையா போற்றி
5. ஓம் அக்காரக் கனியே போற்றி
6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
9. ஓம் சங்கரப்ரியனே போற்றி
10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி
11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி
16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
17. ஓம் ஊழி முதல்வா போற்றி
18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
19. ஓம் ராவணாந்தகனே போற்றி
20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
21. ஓம் பெற்ற மாளியே போற்றி
22. ஓம் பேரில் மணாளா போற்றி
23. ஓம் செல்வ நாரணா போற்றி
24. ஓம் திருக்குறளா போற்றி
25. ஓம் இளங்குமார போற்றி
26. ஓம் விளக்கொளியே போற்றி
27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
30. ஓம் இமையோர் தலைவா போற்றி

- Advertisement -

31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி
35. ஓம் நந்தா விளக்கே போற்றி
36. ஓம் நால் தோளமுதே போற்றி
37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி
41. ஓம் மூவா முதல்வா போற்றி
42. ஓம் தேவாதி தேவா போற்றி
43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி
46. ஓம் வட திருவரங்கா போற்றி
47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
51. ஓம் மாலே போற்றி
52. ஓம் மாயப் பெருமானே போற்றி
53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
54. ஓம் அருள்மாரி புகழே போற்றி
55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

narasimha avadharam

61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
64. ஓம் அரவிந்த லோசன போற்றி
65. ஓம் மந்திரப் பொருளே போற்றி
66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
69. ஓம் பின்னை மணாளா போற்றி
70. ஓம் என்னையாளுடையாய் போற்றி
71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
72. ஓம் நாரண நம்பி போற்றி
73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
83. ஓம் இனியாய் போற்றி
84. ஓம் இனிய பெயரினாய் போற்றி
85. ஓம் புனலரங்கா போற்றி
86. ஓம் அனலுருவே போற்றி
87. ஓம் புண்ணியா போற்றி
88. ஓம் புராணா போற்றி
89. ஓம் கோவிந்தா போற்றி
90. ஓம் கோளரியே போற்றி

- Advertisement -

Narasimmar

91. ஓம் சிந்தாமணி போற்றி
92. ஓம் சிரீதரா போற்றி
93. ஓம் மருந்தே போற்றி
94. ஓம் மாமணி வண்ணா போற்றி
95. ஓம் பொன் மலையாய் போற்றி
96. ஓம் பொன்வடிவே போற்றி
97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி
101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
103. ஓம் வள்ளலே போற்றி
104. ஓம் வரமருள்வாய் போற்றி
105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
107. ஓம் பத்தராவியே போற்றி
108. ஓம் பக்தோசிதனே போற்றி

pragaladhan

தீமையை அழிக்க தோன்றிய ஸ்ரீ நரசிம்மரை போற்றும் 108 போற்றி துதி இது. உக்கிர தெய்வமான ஸ்ரீ நரசிம்மரை வழிபாடும் போது உடல், மனம், ஆன்மா என்கிற மூன்றிலும் திரிகரண சுத்தியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். மகாவிஷ்ணுவின் வழிபாட்டிற்குரிய சனிக்கிழமைகள் அன்றும், செவ்வாய்கிழமைகள் அன்றும் நரசிம்மர் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று, துளசி மாலையை நரசிம்மருக்கு சாற்றி, இந்த 108 போற்றி துதியை துதித்து வழிபடுவதால் நமது மனங்களில் இருக்கும் தீய எண்ணங்கள் நீங்கும். எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி கிடைக்கும். உடல் மற்றும் மனம் பலம் பெறும். தீய சக்திகளின் பாதிப்பு, நோய், எதிரிகளின் தொல்லை போன்ற அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

narsimha

இறைவனை அடைவதற்கு பல வழிகள் இருத்தலும் பக்தி வழிதான் சாமானிய மக்களும் இறைவனுடன் கலப்பதற்கு மிக சுலபமான வழி என பல ஆன்மீக அருளாளர்களின் கருத்தாக்க இருக்கிறது. புராணங்களில் இரண்யகசிபு என்கிற அரக்கனுக்கு புதல்வனாக பிரகலாதன் பிறந்தாலும், அனைத்தையும் காக்கும் ஸ்ரீ நாராயணனின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தன்னுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட போதும் நாராயணனின் மீதான பக்தியை பிரகலாதன் விட்டுக்கொடுக்கவில்லை. இதை கண்டு மனம் குளிர்ந்த திருமால் தனது பக்தன் பிரகலாதனை காக்க “நரசிம்ம அவதாரம்” எடுத்து அவனை ரட்சித்தார். நாமும் நரசிம்ம மூர்த்தியை வணங்குவதால் பல நன்மைகளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
அறிவில் சிறக்க சரஸ்வதி ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Narasimha 108 potri in Tamil or Narasimhar potri in Tamil. It is also called as Narasimha potri lyrics in Tamil or Narasimha slogam in Tamil.

- Advertisement -