வெள்ளை முடிக்கு டை போட்டு இருக்கீங்கன்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இயற்கையான முறையில் வெள்ளை முடிகளை இப்படி நிரந்தரமாக கருப்பா மாத்திக்கோங்க.

white-hair
- Advertisement -

அழகை குறைத்து காட்டும் வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. நீங்கள் எந்த வழியை பின்பற்றி வந்தாலும் சரி, ஒரே ஒரு முறை இந்த குறிப்பையும் முயற்சி செய்து பாருங்கள். இது உங்களுடைய முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றும். ஆனால் ஒரே நாளில் இந்த அதிசயம் நடக்காது. இந்த பேக்கை போட்டவுடன் உங்களுடைய முடி கருப்பாக மாறிவிடும். ஒரு சில நாட்களில் அந்த கருப்பு போகத்தான் செய்யும். தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றி வர நிரந்தரமாக உங்கள் தலைமுடியில், நரை முடி வருவதை தவிர்க்கலாம்.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன. அதை எப்படி தயார் செய்வது என்று விரிவாக பார்ப்போம் வாருங்கள். ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துளசி இலை பொடி – 1 ஸ்பூன், கருவேப்பிலை பொடி – 1 ஸ்பூன், செம்பருத்திப்பூ பொடி – 1 ஸ்பூன், அவுரி இலை பொடி – 1 ஸ்பூன், ஹென்னா பொடி – 1 ஸ்பூன், கடுக்காய் பொடி – 1 ஸ்பூன், இந்த 6 பொடிகளையும் போட்டு நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இதில் டீ டிக்காஷன் அல்லது காபி டிகாஷனை ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். கலந்ததை அப்படியே ஒரு இரவு முழுவதும் ஊற விடுங்கள். இரவு இதை தயார் செய்துவிட்டு, மறுநாள் காலை உங்களுடைய தலையில் போட்டுக் கொள்ளலாம். மறுநாள் காலை எழுந்து உங்களுடைய தலையில் எங்கே எல்லாம் வெள்ளை முடிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கே எல்லாம் மட்டும் இந்த பேக்கை தடவுங்க போதும். தலை முழுவதும் எல்லா இடங்களிலும் இந்த பேக் போடுவதை தவிர்த்து விடலாம். இந்த பேக் போடுவதன் மூலம் முடி கொஞ்சம் ட்ரை ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த பேக்கை போட்டு ஒரு மணி நேரம் கழித்து, சாதாரண தண்ணீரில் தலை முடியை அலசிவிடுங்கள். ஒருநாள், இரண்டு நாள் கழித்துதான் இந்த நிறம் இன்னும் அதிகமாக உங்களுடைய முடியில் ஒட்டி பிடிக்கும். இரண்டு நாள் கழித்து கூட மையில்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம். மாதத்தில் 1 நாள் இந்த பேக் போட்டாலும் போதும். உங்களுக்கு ரொம்பவும் நரைமுடி வருகிறது என்றால் மாதத்தில் 2 முறை இந்த பேக்கை பயன்படுத்துங்க.

- Advertisement -

சில பேருக்கு சைனஸ் பிரச்சனை, தலைபாரம் எல்லாம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒரு மணி நேரம் இந்த பேக்கை தலையில் வைக்காமல், 15 லிருந்து 20 நிமிடம் வைத்துக் கூட தலைக்கு குளித்து விடலாம். கலர் அடர்த்தியாக பிடிக்கவில்லை என்றால் வாரத்தில் ஒரு முறை மீண்டும் இந்த பேக்கை போடுவதில் ஒன்றும் தவறு கிடையாது. இப்படி பொடியை தலையில் போடும்போது, தலைமுடி டிரை ஆகும். ஆகவே வாரத்தில் ஒரு நாள் ஆயுள் பாத் எடுத்துக் கொள்வது தலைமுடி ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.

இதையும் படிக்கலாமே: இப்படியெல்லாம் கூட உப்பை பயன்படுத்தலாம்னு நீங்க நினைச்சு கூட, பார்த்து இருக்க மாட்டிங்க. வாங்க அப்படி எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சிக்கலாம்.

நரைமுடி உள்ளவர்கள் மேலே சொன்ன குறிப்பை பின்பற்றி பாருங்கள். பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. நிச்சயமாக ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக வளர தொடங்கிவிடும். குறிப்பு பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -