10 பைசா செலவில்லாமல் பத்தே நிமிஷத்தில் வீட்டில் இருக்கும் மொத்த கொசுவையும் விரட்டி அடிப்பது எப்படி? 100% ரிசல்ட் தரும் இயற்கை கொசு விரட்டி!

kosu-mosquito-veppilai-sambrani
- Advertisement -

கொசுவால் உண்டாக கூடிய ஏராளமான நோய்கள் பெருகி இருக்கும் இந்த நிலையில் பல்வேறு செயற்கை கொசு விரட்டிகள் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. எவ்வளவுதான் கொசு விரட்டிகளை நீங்கள் மாத்தி மாத்தி பயன்படுத்தி பார்த்தாலும், அதனால் மிகப்பெரிய பலன் இருந்திருக்க வாய்ப்பே இல்லை! அதுவும் கூடுதலாக நாம் செலவு செய்யவும் வேண்டி இருக்கிறது. இப்படி இல்லாமல் 10 பைசா கூட செலவு செய்யாமல் எப்படி கொசுவை விரட்டி அடிப்பது? என்று இந்த வீட்டுக் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாங்க.

ரொம்பவே எளிதான முறையில் செலவே இல்லாமல் நம் வீட்டில் இருக்கக்கூடிய ரெண்டு பொருட்களை வைத்து கொத்துக் கொத்தாக கொசுக்களை விரட்டி அடிக்க போகிறோம். ஒரு கொசு கூட உங்க வீட்டில் நீங்கள் இனி பார்க்கவே முடியாது என்றால் பார்த்துக்கோங்க. 100% இது வேலை செய்யக் கூடியது, பக்க விளைவுகளும் இல்லை.

- Advertisement -

ஒரு பீங்கான் டீ கப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இந்த வேலையை செய்து முடித்த பின்பு அதை சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும். அதனுள் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஒன்றை எடுத்து பற்ற வைத்து கொளுத்தி போடுங்கள். முழு சாம்பிராணியும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாதி சாம்பிராணி பயன்படுத்தினால் கூட போதும்.

சாம்பிராணி புகை வர ஆரம்பித்ததும், நெருப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது இந்த கப்பிற்குள் அரை கைப்பிடி அளவிற்கு வேப்பிலை இலைகளை பிரஷ்ஷாக பறித்து வந்து போடுங்கள். வேப்பிலை கிடைக்காதவர்கள் காய வைத்த வேப்பிலையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், பரவாயில்லை. சாம்பிராணியின் புகை வேப்பிலையின் மீது பட்டு வேப்பிலை வாசத்துடன் வீடு முழுவதும் பரவத் துவங்கும். இதை வீட்டில் இருக்கக் கூடிய இண்டு, இடுக்குகள் விடாமல் எல்லா இடங்களிலும் காண்பியுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் எல்லா இடங்களிலும் இந்த புகையை பரப்பி விட்ட பின்பு கதவு, ஜன்னல்களை எல்லாம் கொசு வலை போட்டு மூடி வைத்து விடுங்கள். பத்து நிமிடத்தில் வீட்டில் இருக்கும் மொத்த கொசுவும் செத்து மடிந்து விடும் அல்லது வெளியில் ஓடிவிடும். அதன் பிறகு மீண்டும் ஒரு கொசு கூட உங்க வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காது. அந்த அளவிற்கு கொசுவை ஓட ஓட விரட்டி அடிக்கக் கூடிய தன்மை இந்த ஒரு விஷயத்திற்கு உண்டு. நேரடியாக வேப்பிலையை எரிப்பதை விட, சாம்பிராணி புகையில் எரியும் பொழுது ரொம்பவே நல்ல ரிசல்ட்டை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

நாம் செயற்கையாக வாங்கும் கொசு விரட்டிகளில் இருந்து வரக் கூடிய புகையை சுவாசித்தால் சுவாச பிரச்சனைகள் கூட நமக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதிலேயே கூட இந்த வேப்பிலை படம் தான் சிலவற்றில் போடப்பட்டிருக்கும். வேப்பிலையை விட சிறந்த கொசு விரட்டி இருக்கவே முடியாது. அதை இந்த வகையில் நீங்கள் சரியாக பயன்படுத்தி பாருங்கள், இனி ஒரு கொசு கூட உங்களை கடிக்கவே செய்யாது. அதனால் நோய்களும் பரவாது, பாதுகாப்பாக இருக்கலாம்.

- Advertisement -