ஒரே மாதத்தில் நரைமுடி, இளநரை இரண்டும் இருந்த இடம் தெரியாமல் மறைய இதை விட சூப்பர் ரெமிடி கிடையாது. அப்புறம் பாருங்க நீங்களே தேடினாலும் ஒரு நரை முடி கூட கண்டுபிடிக்க முடியாது.

hair2
- Advertisement -

இந்த நவீன காலத்தில் உள்ள மிகப்பெரிய சிக்கல் ஆரோக்கியம் சார்ந்ததாகவே உள்ளது. ஒவ்வொரு உடல் சார்ந்த விஷயத்திலும் நாம் பெரிய அளவில் சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக இந்த இளநரை பிரச்சனையை சொல்லலாம். எத்தனையோ பிரச்சனைகளுக்கு இடையில் இது ஒரு பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நரை தோன்றும் போது நமக்கு வயதாகி விட்டது என்று எண்ணம் தோன்றும். இதே இளம் வயதினருக்கு இந்த நரை முடி வரும் போது அவர்களுடைய நிலைமையை நாம் சற்று யோசிக்க தான் வேண்டும். இந்த அழகு குறிப்பு பதிவில் இளநரை நரைமுடி இரண்டையும் சரி செய்வதற்கான ஒரு அருமையான ரெமிடியை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இளநரை போக்க கூடிய எண்ணெய் தயாரிக்கும் முறை
இந்த எண்ணெய் தயாரிக்க நாம் சில பொருள்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். அது செம்பருத்தி பொடி, கரிசலாங்கண்ணி பொடி, நெல்லிக்காய் பொடி, இவை தான். இந்த மூன்றும் உங்களுக்கு இயற்கையான முறையில் கிடைத்தால் வாங்கி காய வைத்து அரைத்து பவுடராக செய்து வைத்துக் கொண்டு இதில் சொன்ன அளவுகளில் பயன்படுத்துங்கள். இன்னும் கூடுதல் பலனை பெறலாம்.

- Advertisement -

இந்த எண்ணெய் தயாரிக்க 250 கிராம் நல்ல சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள். இதில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயும் மிகவும் முக்கியமானது. இதற்கு நாம் கடைகளில் பாட்டில்களில் அடைத்து வைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் பொழுது அந்த அளவிற்கு பலன் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் ஊற்றுங்கள். அதே போல் இந்த எண்ணெய் காய்ச்ச நிச்சயமாக இரும்பு கடாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் ஓரளவிற்கு சூடானவுடன் முதலில் மூன்று டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி பொடி ஓரளவுக்கு கொதித்து வரும் பொழுது ஒரு டீஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடி, அரை டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு எள், இதற்கு கருப்பு எல்லை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் வெள்ளை எள்ளை பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

இவை அனைத்தையும் சேர்த்த பிறகு எண்ணெய் ஒரு பத்து நிமிடம் வரையில் லோ ஃபிளேமில் 10 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த எண்ணையை ஆற விட வேண்டும். எண்ணெய் ஆறும் போது மேலே மூடி போட்டு மூட கூடாது. இந்த எண்ணெய் இரும்பு கடாயில் இரண்டு நாட்கள் வரை அப்படியே இருக்க வேண்டும் இதில் இருக்கும் போது இந்த கடாயில் உள்ள சத்தும் இந்த எண்ணெயில் சேர்ந்து நமக்கு இந்த எண்ணெய் மேலும் பலனளிக்க கூடியதாக மாறும்.

அதன் பிறகு இந்த எண்ணையை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு நீங்கள் தலைக்கு தினமும் தேய்க்கும் எண்ணையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது இந்த எண்ணெய் தேய்த்து ஒரு அரை மணி நேரம் தலையில் ஊரையே பிறகு அலசியும் விடலாம். ஆனால் கட்டாயமாக வாரத்தில் மூன்று நாட்களாக இந்த எண்ணையும் உங்கள் தலையில் செய்து ஐந்து நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கையோடு உதிர்ந்து விழும் உங்க முடியை இனி நீங்களே இழுத்தா கூட உதிராத அளவுக்கு ஸ்ட்ராங்கா மாற்ற இது தாங்க பெஸ்ட். நல்லா கருகருன்னு வளரவதோடு ஒரு முடி கூட உதிராது.

இந்த எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது இளநரை பிரச்சனையே வராது. ஒரு வேளை வந்து முடியின் நிறம் மாறி இருந்தால் அதுவும் கருமையாக மாறுவதுடன் முடி நல்ல கருகருவென்று வளரவும் இந்த எண்ணெய் உதவி செய்யும் முடி வளர்ச்சி முடி உதிர்வை தடுத்தல் இளநரை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு எண்ணை நல்ல தீர்வாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -