அக்குள் பகுதியில் கருமை மறைய இதை தடவினால் ஷேவ் பண்ண வேண்டிய அவசியம் கூட உங்களுக்கு இருக்காது! பக்க விளைவுகள் இல்லாத இயற்கை முறை.

under-arms-clean
- Advertisement -

மென்மையான தேகம் கொண்ட இந்த பெண்களுக்கு தங்களுடைய சருமம் எப்பொழுதுமே ரோமங்கள் இன்றி சுத்தமாக இருக்கவே விரும்புவார்கள். அக்குள் பகுதியில் இருக்கும் கருமை நீங்கி, இயற்கையான முறையில் முடிகள் உதிர இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி பார்க்கலாம். செயற்கை க்ரீம்கள் உபயோகிப்பதை விட, இது ரொம்ப நல்ல பலன்களைக் கொடுக்கும். அக்குள் பகுதியில் இருக்கும் கருமை மறைய என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரேஸர் பயன்படுத்தி நீங்கள் அக்குள் பகுதிகளில் இருக்கும் முடிகளை அகற்றினால் ஒருவிதமான அசவுகரியம் உண்டாகும். சிலருக்கு அரிப்பு ஏற்பட வாய்ப்புகளும் உண்டு. குறிப்பாக ஸ்லீவ்லெஸ் அணியும் பெண்களுக்கு இந்த குறிப்பு ரொம்பவே பயனுள்ளதாக இருக்க போகிறது. மென்மையான சரும பகுதியான அக்குளில் இயற்கையான முறையில் எப்படி பராமரிப்பு கொடுப்பது?

- Advertisement -

இரண்டு விதங்களில் இந்த சிகிச்சை முறையை எளிதாக கையாளலாம். நீங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சள் அரை கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் சுத்தமான பன்னீர் கலந்து நன்கு கெட்டியாக குழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை அக்குள் பகுதியில் நன்கு தடவி அரைமணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

நன்கு ஊறி உலர்ந்த பின்பு வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான ஒரு காட்டன் துணியை முக்கி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு நீங்கள் அக்குள் பகுதியை துடைத்து எடுக்க வேண்டும். இதை நீங்கள் தினமும் செய்து வருவதன் மூலம் ஒரு சில நாட்களுக்குள் அக்குள் பகுதியில் இருக்கும் மயிர்க்கால்கள் தளர ஆரம்பித்து விடும். அதன் பின்னர் அதுவே தளர்ந்து உதிர்ந்துவிடும். இதற்காக நீங்கள் கஷ்டப்பட்டு ஷேவ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

பின்னர் அதே போல இரண்டாவதாக ஒரு சிறிய பௌலில் பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கெட்டியாக கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து கொள்ளுங்கள். கையில் எடுத்தால் வழிய கூடாது, நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். அதை எடுத்து அக்குள் பகுதியில் நீங்கள் இரவு நேரத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் அப்படியே ஊற விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரால் இதே போல சுத்தம் செய்து கொள்ளுங்கள். பேக்கிங் சோடா பயன்படுத்துவதால் நீங்கள் இந்த முறையை கையாளும் பொழுது சுத்தம் செய்த பின்பு ஏதாவது ஒரு மாய்ஸ்சுரைசர் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.

வறட்சியாக இல்லாமல் இருக்க இது போல் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது நல்லது. இந்த குறிப்புகளை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மீண்டும் அக்குள் பகுதியில் தேவையில்லாமல் முடி வளர்வதை தடுத்து விடலாம். ரொம்பவே இயற்கையான முறையில் கையாளக் கூடிய இந்த இரண்டு குறிப்புகளும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் பக்க விளைவுகள் கண்டிப்பாக இருக்காது. உங்கள் சருமம் ரொம்பவே ஆரோக்கியமாக எரிச்சல் இன்றி, அசவுகரியம் இன்றி மென்மையாக காணப்படும். மேலும் அக்குள் பகுதியில் இருக்கும் அழுக்குகள், கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.

- Advertisement -