இந்த 3 பொருட்கள் எப்போதும் உங்கள் கையில் இருந்தால், கெட்ட சக்தி உங்கள் பக்கம் கூட நெருங்காது. மணக்குழப்பும் இல்லாமல் எப்போதும் தெளிவாக சிந்திக்கலாம்.

perumal
- Advertisement -

காலை எழுந்து நேர்மறை எண்ணங்களோடு சந்தோஷமாக வேலைக்கு கிளம்புவோம். ஆனால் நம்மை சந்திக்கக்கூடிய ஆட்களும் அதே போல நேர்மறை எண்ணத்தோடு வருவார்களா, என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அவர்களுக்குள் இருக்கும் குழப்பம். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை, நாம் அவர்களிடம் பேசினாலும், அவர்கள் நம் பக்கத்தில் வந்து அமர்ந்தாலும், அவர்களுடைய நெகட்டிவ் எனர்ஜி நம்மை தொற்றிக் கொள்ளும். ஆக நாம் தெளிவாக இருந்தாலும் நம்மை குழப்புவதற்கு நம்மை சுற்றி ஒரு கூட்டம் இருக்கிறது. இது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். அடுத்தபடியாக, நாம் அழகாக சுறுசுறுப்பாக வேலைக்கு கிளம்பும்போது நம்மை பார்ப்பவர்களுடைய கண் திருஷ்டி இதுவும் ஒரு நெகட்டிவ் எனர்ஜி தான்.

இப்படி அடுத்தவர்களுடைய நெகட்டிவ் எனர்ஜியிலிருந்து நாம் தப்பிக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நமக்குத் தோன்றும் நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சில பேருக்கு எதிர்மறை எண்ணங்கள் அடுத்தவர்களிடமிருந்து ஒட்டிக் கொள்ளாது. அவர்களுக்குள்ளாகவே தோன்றும். எதற்காக தான் சோகமாக இருக்கிறார்கள் என்றே தெரியாது. எந்நேரமும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகமாக இருப்பார்கள். வேலை செய்யும் போது கூட ஒரு சோகம். கண்களில் முகத்தில் தெரியும். அப்படிப்பட்டவர்களை சுறுசுறுப்பாக மாற்றி புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல் விலக கையில் வைத்துக் கொள்ள வேண்டிய 3 பொருட்கள்:
இந்த 3 பொருட்களுமே வாசம் நிறைந்த பொருட்கள். இறை சக்தி நிறைந்த பொருட்களும் கூட. சுலபமாக நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள். பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, இது மூன்றுக்கும் அப்படி ஒரு சக்தி. ஒரு சின்ன டிஷ்யூ பேப்பரில் இரண்டு துண்டு பச்சை கற்பூரம், இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு வைத்து மடித்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே உங்களுடைய பர்ஸில் வைக்கலாம். அல்லது பேக், ஹேண்ட் பேகில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த வாசமானது உங்களை சுற்றி இருக்கும். இந்த வாசத்தை தாண்டி யாருடைய எதிர்மறை எண்ணமும் உங்களை தாக்காது. எப்போதும் நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல பிரஷ்ஷாக இருப்பீர்கள். உதாரணத்திற்கு ஒரு கோவிலுக்கு செல்கின்றோம். அந்த கோவிலில் இருந்து வெளிவரக்கூடிய வாசம், அந்த கோவிலில் கொடுக்கக்கூடிய தீர்த்தம் நம்மை பாசிட்டிவாக மாற்றுகிறது. அந்தத் தீர்த்தத்தில் சேர்க்கக்கூடிய பொருட்கள்தான் இந்த பச்சை கற்பூரம் லவங்கம் ஏலக்காய்.

- Advertisement -

இந்த பெருமாள் கோவிலுக்கு வந்தாலே ஒரு நிம்மதி. எப்போதும் கோவிலிலேயே அமர்ந்திருக்கலாம் போல இருக்கிறது என்று கூட சில பேர் சொல்லுவார்கள். காரணம் கோவிலிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய அந்த நல்ல வாசம் தான் மனநிறைவை கொடுக்கின்றது. இந்த நல்ல வாசம் மூளைக்கு சென்று நம்மை எதிர்மறையாக சிந்திக்க வைக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் வறுமை பிரச்சனை எதுவும் எங்களுக்கு இல்லை என்ற வார்த்தை நீங்கள் சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் மட்டும் எப்போதும் இல்லை என்று தவறியும் கூட சொல்ல கூடாது.

இதே போல தான் பணம் வைக்கும் பெட்டியிலும் இந்த மூன்று பொருட்களை வைத்து விட்டால் அந்த இடத்தில் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்து இருக்கும். பணம் மேலும் மேலும் சேரும். மகாலட்சுமியும் வசியமாவாள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெரலாம்.

- Advertisement -