உங்க உடலில் நெகடிவ் வைப்ரேஷன் இருக்குன்னு நினைக்கிறீர்களா? உங்களுக்கு தெரியாமல் போடப்பட்ட சூழ்ச்சி அவிழ என்ன செய்யனும் தெரியுமா?

- Advertisement -

நன்றாக இருந்த நாம் திடீரென ஏதோ மாதிரியாக சரி இல்லாதது போல ஒரு உணர்வை உணர்ந்திருக்க கூடும். இதைத்தான் நெகட்டிவ் வைப்ரேஷன் என்கிறோம், அதாவது எதிர்மறை ஆற்றல் ஆகும். நம்மால் முடியாது, நம்மால் இயலாது, நாம் யாருக்குமே பயனில்லாமல் இருக்கிறோம் என்று ஏதாவது ஒரு வகையில் எதிர்மறையான எண்ணங்கள் அதிகரித்து காணப்படும். இதை பல்வேறு விதங்களில் கூறப்பட்டாலும் இந்த எதிர்மறை எண்ணங்கள் மறைய நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் உடலில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலக, முதலில் ஒரு எலுமிச்சை கனியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழம் தான் பரிகாரத்திற்கு உகந்தது. இதை உங்களுடைய தலையில் சிறிது நேரம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த திசையில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம் பரவாயில்லை.

- Advertisement -

ஓரிரு நிமிடங்கள் வைத்துவிட்டு பின்பு அதை கையில் எடுத்து காலுக்கு அடியில் வைத்து நசுக்கி கொள்ளுங்கள். பின்பு அதை எங்காவது வீசிவிட்டு கை, கால்களை கழுவி விட்டு உள்ளே வந்து விடுங்கள். இப்படி செய்வதால் நம் உடலில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் விலகும் என்கிற ஒரு நம்பிக்கை நமக்குள் பிறக்கும். இந்த நம்பிக்கையே நமக்குள் இருக்கின்ற நெகட்டிவ் வைப்ரேஷன்களை துரத்தி அடிக்கும் என்பது தான் இதில் இருக்கும் சூட்சமமாகும். உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் கால்களை அமர்த்தி வைக்கலாம். இதுவும் தீய சக்திகளை மற்றும் நெகட்டிவ் எண்ணங்களை விரட்டி அடிக்கக்கூடிய ஒரு எளிய பரிகாரமாக இருந்து வருகிறது. வெதுவெதுப்பான தண்ணீரில் இவற்றை செய்வது நல்லது.

பின்னர் எதிர்மறை சக்திகள் விலக ஒரு பேப்பரில் முக்கோண வடிவில் ஒரு உருவத்தை வரைந்து கொள்ளுங்கள். இந்த முக்கோண வடிவத்திற்குள் ‘ஓம்’ என்னும் மந்திரத்தை எழுதி வையுங்கள். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் முருகனுக்கு உரியது என்றாலும் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான மந்திரமாக விஞ்ஞானிகளால் வியக்கப்பட்டு பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இந்த மந்திரத்தை எழுதி அதை சிறியதாக மடித்து ஒரு தாயத்தில் போட்டு அடைத்துக் கொள்ளுங்கள். இதை பாதிக்கப்பட்டவர்களுடைய கைகளில் கட்டி விட்டால் போதும், உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இதை நீங்கள் கட்டலாம். இதனால் உங்களுக்குள் இருக்கின்ற கெட்ட எண்ணங்கள், வக்ர புத்திகள் ஒழியும், தீய சக்திகள் உங்களை விட்டு ஓடும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிக்கலாமே:
ஆண் குழந்தை பிறக்க அபிராமி அந்தாதி பாடல் எப்படி பாடுவது?

ஒரு வீட்டில் தீய சக்திகளின் ஆதிக்கம் அல்லது நெகட்டிவ் எண்ணங்கள் அதிகரித்து காணப்பட்டால், அந்த வீட்டில் துளசி செடியை வளர்த்து வருவது சிறப்பாக இருக்கும். தவசிகள், முனிவர்கள் போன்றவர்கள் காட்டில் கூட துளசி செடிகளை வளர்த்து வந்தனர். அதனால் எந்த விதமான கெட்ட சக்திகளும் அவர்களை அண்டாது என்பது தான் அவர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் ஐந்து வகையான எண்ணெய்களை கொண்டு வீட்டில் தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் இருக்கக்கூடிய துஷ்ட சக்திகள் ஓடிவிடும் என்பதும் உண்டு. வீட்டில் நாய் வளர்ப்பது, வளர்க்க முடியாதவர்கள் தினமும் நாய்க்கு உணவளிப்பது மற்றும் பைரவரை வணங்கி வருவது போன்றவையும் தீய சக்திகளை விரட்டியடிக்கும் வழிகளாகும்.

- Advertisement -