ஆண் குழந்தை பிறக்க அபிராமி அந்தாதி பாடல் எப்படி பாடுவது?

aan-kulanthai-abirami-anthathi
- Advertisement -

அபிராமி பட்டர் எழுதிய இந்த பாடல்கள் யாவும் அன்னை அபிராமியை நோக்கி பாடுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடல்களைப் பாடுவோருக்கு நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும் என்கிற நம்பிக்கை பக்தர்களிடையே அசைக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. அந்த வகையில் கருவில் வளரும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்க அபிராமி அந்தாதி பாடல் எப்படி பாடுவது? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆணோ, பெண்ணோ எந்த குழந்தையாக இருப்பினும் நல்லபடியாக பிறந்தால் போதும் என்று நினைப்பவர்கள் தான் என்று ஏராளம்! ஆனாலும் முதலில் பெண்மகவு பெற்றவர்கள் அடுத்து ஆண் மகவை தான் அதிகம் விரும்புவார்கள். அதுவே முதலில் ஆண் குழந்தை பிறந்தால் அடுத்து எந்த குழந்தையாக இருப்பினும் பரவாயில்லை என்பார்கள். எப்படியும் ஆண் மகவை விரும்புபவர்கள் அபிராமியின் இந்த பாடலை பாடி வந்தால் நிச்சயம் கேட்டது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

65. ஆண்மகப்பேறு அடைய:
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!

இப்பாடலில் அபிராமி வல்லியாக இருக்கக்கூடிய அபிராமி தாயை பார்த்து எல்லா உலகங்களும், தேவலோகமும், பூ உலகம் அறியும் படியும் மன்மதனை எரித்த யோகி சிவபெருமானுக்கு, நீங்கள் ஆறு அழகிய திருமுகங்களும், 12 திருக்கரங்களும் கொண்ட ஞானக் குழந்தை முருகப் பெருமானை அவதரிக்க கூடிய சக்தியை கொடுத்தீர்கள்! என்னே உங்களுடைய பெருமை என்பதை புகழும் விதமாக பாடப்பெற்றுள்ளது.

- Advertisement -

ஆண் மகப்பேறு அடைய அபிராமி அந்தாதியில் இருக்கின்ற இந்த 65 ஆவது எண் பாடலை தினமும் தொடர்ந்து பாடி வர கேட்டது கிடைக்கும். அபிராமி அந்தாதி பாடலை காலையில் எழுந்ததும் பிரம்ம முகூர்த்தத்தில் மூன்று முறை பாடலாம் அல்லது மாலையில் நாலரை மணியிலிருந்து ஆறரை மணிக்குள் பாடுவது சிறப்பு! மனதில் பாடும் பொழுது அன்னை அபிராமியை நினைத்துக் கொண்டு பாடுங்கள்.

அபிராமி அந்தாதியில் இருக்கின்ற பாடல்கள் அதீத சக்திகளை பெற்றுள்ளது. உங்கள் பிரச்சனைக்கு உரிய பாடல்களை நீங்கள் பாடி வந்தால் அதற்குரிய தீர்வுகளை எளிதாக காண முடியும் என்பது நம்பிக்கை. இந்த பாடல்கள் பாடத் துவங்கிய சில நாட்களிலேயே இதற்குரிய பலன்களை நீங்கள் அனுபவிக்க பெறுவீர்கள். சக்தி வாய்ந்த இந்த அபிராமி பாடல்களில் ஆண் மகவு பெறுவதற்கு மேற்கண்ட பாடலை பாடி பயன்பெறுங்கள்.

- Advertisement -

101. அபிராமி அந்தாதி நூற்பயன்:
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே!

இதையும் படிக்கலாமே:
காலையில் எழுந்தவுடன் இரண்டு உள்ளங்கைகளிலும் இந்த பொருளை வைத்தால் அந்த நாள் முழுவதும் உடல் சோர்வு அடையாது. சுறுசுறுப்பாக செயல்பட்டு வாழ்க்கையை வெல்லலாம்.

அபிராமி அந்தாதி பாடல் பாடும் பொழுது அதன் நூற்பயணையும் சேர்த்து பாடுவது சிறப்பம்சமாக இருந்து வருகிறது. முதலில் நூற்பயனை பாடிய பின்பு நீங்கள் உங்கள் பிரச்சனைக்கு உரிய பாடல்களை பாடலாம். நூற்பயன் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள பாடல் ஆகும். பாடல் எண் 101 இல் இடம்பெற்றுள்ள இந்த ஒரு பாடலை நீங்கள் தினமும் உச்சரித்து வந்தால் அனைத்து பாடல்களையும் பாடிய பலன்கள் கிடைக்கும் என்பது தான் இதன் மகத்துவமாக இருக்கிறது. மொத்தமாக அபிராமி அந்தாதியில் 100 பாடல்கள் இருக்கின்றன. நூறு பாடல்களையும் அனைவராலும் தினமும் பாட முடியாத பட்சத்தில் 101வது பாடலாக இருக்கக்கூடிய இப்பாடலை நீங்கள் பாடினால் எல்லா பலன்களையும் அடையலாம் என்று அபிராமி பட்டர் கூறியுள்ளார்.

- Advertisement -