48 நாட்களில் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

varahi4
- Advertisement -

நம்மை விட வயதில் சிறியவர்களுக்கு எல்லாம் திருமணம் நடந்திருக்கும். ஆனால், நமக்கு திருமணம் நடந்திருக்காது. எந்த நல்ல காரியத்திற்கு சென்றாலும் உங்களுக்கு எப்ப திருமணம் என்று கேள்வியை கேட்கும் போது, நம்முடைய மனசு படாத பாடுபடும். நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, உங்கள் திருமணம் நல்லபடியாக நடந்து முடிய ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

திருமணம் நடக்க பரிகாரம்

திருமணம் நடக்க வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் நெல்லி செடியை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். அம்பாளை நினைத்து இந்த நெல்லி செடியை உங்க வீட்ல வையுங்க. நெல்லி செடியை எத்தனை முறை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம், அவ்வளவு எளிதில் உங்களுக்கு திருமணம் நடந்து விடும். உங்களுடைய மொபைல் போன் ஸ்கிரீன் சேவராக, டிபியாக இந்த நெல்லி மரத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் தினமும் நெல்லிக்காயில் ஒரு சிறு துண்டாவது சாப்பிட வேண்டும். ஊறுகாயாகவாவது சாப்பாட்டில் ஒரு துண்டு நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளவும். நெல்லி மரத்துக்கு அப்படி ஒரு பவர். நெல்லி மரத்தை முடிந்தால் ஐந்து முறை வலம் வாருங்கள். தவறே கிடையாது. சீக்கிரம் திருமண யோகம் உங்களை தேடி வரும். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய பிரார்த்தனையை அந்த நெல்லி மரத்திடம் மனம் உருகி ஒரு இரண்டு நிமிடம் சொல்லுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

இதோடு வெள்ளிக்கிழமை வாராகிக்கு உங்கள் கையால் இந்த மாலையை கட்டி போடுங்கள். வெள்ளிக்கிழமை சரியாக ராகு கால நேரத்தில், இந்த மாலையை வாராகி அன்னைக்கு செலுத்த வேண்டும். 21 விரலி மஞ்சள் எடுத்துக்கோங்க. அதை ஒரு மஞ்சள் கயிறில், பூ கட்டுவது போல கட்டி, உங்க வீட்டு பக்கத்தில் கோவிலில் இருக்கும் வாராகி அன்னையின் திருவுருவ சிலைக்கு இந்த மாலையை சாத்த வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. வீட்டு பக்கத்தில் வாராஹி சன்னிதானம் இல்லை எனும் பட்சத்தில், துர்க்கை அம்மனுக்கு இந்த மாலையை நீங்கள் சாத்தி விடலாம். திருமண தடை விலக இந்த விரலி மஞ்சள் மாலை பரிகாரம் ரொம்ப ரொம்ப சிறப்பான பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. மேலே சொன்ன இரண்டு பரிகாரத்தையும் ஆண்கள் பெண்கள் இருவருமே செய்யலாம்.

அதேபோல திருமணம் ஆன தம்பதியர்களிடம், ஆசிர்வாதத்தை பெற வேண்டும். திருமணம் ஆன சுமங்கலி பெண்களுக்கு உங்களால் முடிந்த தானத்தை கொடுங்க. வயதான தம்பதியர்களிடம் ஆசிர்வாதம் பெறும்போது உங்களுக்கு சீக்கிரம்  திருமண பாக்கியம் உண்டாகும். சில பெண்களுக்கு திருமணம் ஆக பணம் மட்டும் ஒரு தடையாக இருக்கும். கஷ்டப்படக்கூடிய அப்படிப்பட்ட குடும்பத்தில், இருக்கும் பெண்ணுக்கு பணத்தை கொடுத்து உதவி செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

முடிந்தால் இரண்டு கிராமில் தாலி கூட எடுத்துக் கொள்ளுங்கள் தவறு ஒன்றும் கிடையாது. இப்படி மனதார அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது நம்முடைய பிள்ளைகளுக்கு ஜாதகத்தில் இருக்கும் தோஷம் கூட நிவர்த்தி ஆகிவிடும். நிச்சயம் நல்லது நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த இரண்டு பரிகாரத்தையும் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -