வெறும் 10 ரூபாய்க்கு நாட்டு மருந்து கடைகளில் விற்கும் இந்த 1 பொருள் போதும். 1 மாதத்தில் வெள்ளை முடி அனைத்தும் நிரந்தரமாக கருப்பாக மாறும்.

hair5
- Advertisement -

வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏதேதோ செய்கின்றோம். ஆனால் ரிசல்ட் அவ்வளவு முழுமையாக நிரந்தரமாக நமக்கு கிடைப்பது கிடையாது. ஆனால் வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு நாட்டு மருந்து கடைகளில் விற்கக்கூடிய நெல்லிமுள்ளி என்று சொல்லப்படும் காய்ந்த நெல்லிக்காய்களே போதும். நாட்டு மருந்து கடைகளில் நெல்லிமுள்ளி என்றால் கொடுப்பார்கள். இது மலிவாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான். அதை வாங்கிக் கொள்ளுங்கள். ‌நெல்லி முள்ளி என்பது நெல்லிக்காய்களை நன்றாக காயவைத்து கருப்பு நிறத்தில் தயார் செய்து வைத்திருப்பார்கள். இந்த நெல்லிமுள்ளியை ஹேர் டையாக எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் தேவையான அளவு நெல்லிமுள்ளியை எடுத்துக் கொள்ளுங்கள். 50 கிராம் அல்லது 100 கிராம் உங்களுடைய தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். நெல்லிமுள்ளியை ஒரு அடி கனமான வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுத்து எடுக்க வேண்டும். நெல்லிமுள்ளி ஏற்கனவே கருப்பு நிறத்தில் தான் இருக்கும். நீங்கள் அதை இன்னும் கொஞ்சம் வறுத்து எடுக்கும் போது, அந்த நெல்லிமுள்ளி இன்னும் அடர் கருப்பு நிறத்திற்கு வரும்.

- Advertisement -

5 நிமிடங்கள் போல கடாயில் நெல்லிமுள்ளியை வறுத்து விட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீரை நெல்லி முள்ளியில் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் முக்கால் டம்ளர் சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த கலவை அப்படியே நன்றாக ஆறட்டும். இது பார்ப்பதற்கு அப்படியே அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.

ஆறிய பின்பு கொதிக்க வைத்த நெல்லிமுள்ளியை தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவேண்டும். அரைத்த விழுதை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.  தேவையான ஹேர் டை திக்காத கிடைத்திருக்கும். இந்த டையோடு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளுங்கள். தலையில் அப்ளை செய்ய டை தயாராகி விட்டது.

- Advertisement -

இந்த டையை தலையில் முழுவதும் நன்றாக அப்ளை செய்து கொள்ள வேண்டும். வெள்ளை முடி இருக்கக்கூடிய இடத்தில் கவனமாக எல்லா இடங்களிலும் படும்படி அப்ளை செய்து விட்டு இரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் தலையை அலசிக் கொள்ளுங்கள். உங்களுடைய முடியின் நிறம் மாறி இருக்கும். இதேபோல வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த டையை பயன்படுத்தி வரும் போது ஒரே மாதத்தில் முடி நிரந்தரமாக கருப்பாக மாறி இருப்பதை பார்க்க முடியும்.

மீதமான இந்த டையை இரண்டு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் அந்த டை ஜில்லுனு இருக்கும் போது தலையில் போடாதீங்க. சிறிது நேரம் ரூம் டெம்பரேச்சரில் வைத்துவிட்டு அதன் பின்பு தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் இதை டபுள் பாய்லிங்கில் சூடு செய்யலாம். அதாவது சுடுதண்ணீரில் மேலே வைத்து லேசாக சூடு செய்த பின்பு கூட தலையில் அப்ளை செய்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. நரை முடி பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

- Advertisement -