கிரிக்கெட் வரலாற்றிலே இது தான் முதல்முறை . அபாரமான சாதனைக்கு சொந்தமான நியூசிலாந்து அணி

nz team
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.

boult

அந்த 93 ரன்கள் இலக்கினை நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் எளிதாக எட்டியது . அந்த அணியின் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 37 ரன்களை குவித்தார், டெய்லர் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

நியூசிலாந்து அணி 35.2 ஓவர்கள் மீதமிருக்கையில் வெற்றிபெற்றது. அதாவது சரியாக 212 பந்துகள் மீதம் இருந்தன. இதன்மூலம் அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கினை அடைந்த அணி என்ற பெருமையை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது. இந்த நிகழ்வு தற்போதுதான் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு முதல் முறையாக நடந்துள்ளது.

இதற்கு முந்தய சாதனையாக 209 பந்துகள் மீதம் வைத்து ஸ்ரீலங்கா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதனை இந்த போட்டியில் 9 வருடம் கழித்து நியூசிலாந்து அணி முறியடித்து சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

முதலில் இதை கற்றுக்கொண்டு பிறகு விளையாடுங்கள் இந்திய அணியை கடிந்த – லஷ்மண்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -