இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 பேட்டிங் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 93 என்ற எளிதான இலக்கினை நிர்ணயித்தது இந்தியா . இந்த எளிய இலக்கினை எதிர்த்து களமிறங்கியது நியூசிலாந்து அணி.
அந்த 93 ரன்கள் இலக்கினை நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் எளிதாக எட்டியது . அந்த அணியின் ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 37 ரன்களை குவித்தார், அதில் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் லஷ்மண் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் லஷ்மண் பதிவிட்டதாவது : இந்திய அணியின் இந்த தோல்வி எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி எப்படி விளையாடும் என்று நான் நினைக்கவில்லை. மேலும், இது போன்ற ஸ்விங் ஆடுகளங்களில் அதன் தன்மையை புரிந்து அதற்கு ஏற்றார் போல் மாறி ஆட கற்றுக்கொள்ளவேண்டும்.
Disappointing day for Team India today, they can learn to adapt and absorb the pressure better in conditions that are conducive for swing bowling. It was also an outstanding 10 over spell from Trent Boult who exploited the conditions well and bowled beautifully. #4thODI
— VVS Laxman (@VVSLaxman281) January 31, 2019
அப்போதுதான் உங்களால் சிறப்பாக ஆட முடியும். எனவே, இது போன்ற சூழ்நிலைகளை புரிந்து கொள்ள கற்றுக்கொண்டு விளையாடுங்கள். மேலும், போல்ட் தொடர்ந்து 10 ஓவர்களையும் சிறப்பாக வீசினார். அதற்கு வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் லஷ்மண்.
இதையும் படிக்கலாமே :
மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்