வீட்டிற்குள் வரும் பணம் தங்காமல் போக இப்படி ஒரு காரணம் உள்ளதா? இந்த பிரச்சனையை சரி செய்தால் வீட்டிற்குள் வந்த மகாலட்சுமி, வீட்டுக்குள்ளேயே நிரந்தரமாக அமருவாள்.

vasthu-money
- Advertisement -

இறைவனின் அருளால் வருமானத்திற்கு எந்த குறையும் கிடையாது. ஆனால், வீட்டிற்குள் எடுத்து வரக்கூடிய பணம் மட்டும் ஏனோ நிலையாக தங்குவது கிடையாது. வீட்டிற்குள் வருகை தரும் மகாலட்சுமி, நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்காமல் போவதற்கு காரணம் என்ன. பல காரணங்கள் உண்டு. அதில் நம் கண்ணுக்குத் தெரியாத இந்த வாஸ்து பிரச்சனையும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் வாஸ்து படி நில ஓட்டம் சரியாக இல்லை என்றால், அந்த வீட்டிற்கு வரக்கூடிய வருமானம் நிலையாக நிலைத்து நிற்காது என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்களுக்கு மன கஷ்டமும் பணக் கஷ்டமும் ஏற்பட ஒரு வீட்டில் நில ஓட்டம் சரி இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம் தான்.

vasthu

சரி, சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும், வாஸ்து பிரச்சனை இருந்தால் நிச்சயமாக அந்த வீட்டில் கண்ணுக்கு தெரியாத நிறைய பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். கண்ணுக்குத் தெரியாத வாஸ்து பிரச்சனையை சரிசெய்ய நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்தால், நம் வீட்டில் நில ஓட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

முதலில் சாணத்தால் செய்யப்பட்ட வறட்டியை வாங்கி வந்து, அந்த வறட்டியை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சூடு ஆறியதும் சாம்பலை பரிகாரத்திற்கு தயாராக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய மஞ்சள் துணியில் வன்னிமரம் மண் ஒரு கைப்பிடி அளவு, புற்று மண் ஒரு கைப்பிடி அளவு, பச்சை கற்பூரம் சிறிய துண்டு, மஞ்சள்தூள் ஒரு கைப்பிடி அளவு, தயார் செய்து வைத்திருக்கும் சாம்பல் ஒரு கைப்பிடி அளவு, இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக போட்டு சிறிய மூட்டையாக கட்டி இதை உங்களுடைய வீட்டில் வைத்துவிட வேண்டும்.

vanni-tree

உங்கள் வீட்டிற்குள் எந்த இடத்தில் இந்த முடிச்சை வைத்தாலும் சரி, அந்த முடிச்சு உங்கள் வீட்டின் தரையில் படும்படி வைக்க வேண்டும். ஏதாவது ஒரு மூலையில் இந்த முடிச்சை வைத்துவிட்டு அந்த முடிச்சு வெளியில் தெரியாத அளவிற்கு நாற்காலியை வைத்து மறைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இந்த முடிச்சானது பூமியில் படும் போது உங்களுடைய நில ஓட்டத்தில் ஏதேனும் எதிர்மறையான மாற்றங்கள் இருந்தாலும், வாஸ்து ரீதியாக உங்கள் வீட்டில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரி, அது உடனடியாக சரியாகிவிடும்.

- Advertisement -

தேவையற்ற கடன் பிரச்சனை, வருமானம் வீட்டில் தங்காமல் இருக்க, மனக்குழப்பங்கள் நீங்க, உறவுகளுக்குள் சண்டை சச்சரவு, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி பிரச்சனைகள், குழந்தைகள் சொல்பேச்சு கேட்காமல் இருப்பது, வீட்டில் சுப காரிய தடைகள் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அதற்கெல்லாம் இந்த பரிகாரம் நல்லதொரு தீர்வு கொடுக்கும்.

manjal-mudichu

இந்த முடிச்சை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது. அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதுமானது. பழமை வாய்ந்த சிவன் கோவில்களுக்கு சென்றால் அந்த இடத்தில் வன்னி மரம் இருக்கும். அந்த வன்னிமரம் அருகில் இருக்கக்கூடிய ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். கோவிலில் உள்ளவர்களின் அனுமதி கேட்டு அந்த மண்ணை எடுத்து வருவது என்பது சிறப்பு. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -