நில பிரச்சினை நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு

land pbm
- Advertisement -

சொத்து வாங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்காக பல நாட்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்படி கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய சொத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவ்வளவு நாட்களும் அவர்கள் கஷ்டப்பட்டது அனைத்தும் வீணாகிவிட்டது போல் வருத்தப்பட ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட்டால் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்க வேண்டுமென்றால் அதற்கு செவ்வாய் பகவானின் அருள் வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட செவ்வாய் பகவானின் அருளை பெறுவதற்கு செவ்வாய் பகவானின் அதி தேவதையாக கருதக்கூடிய முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று தான் அனைவரும் கூறுவார்கள். நவகிரகங்களால் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாத ஆஞ்சநேயரை நாம் வழிபட்டாலும் நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்ற ஒரு கூற்று நிலவுகிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்க்கிழமை அன்றுதான் மேற்கொள்ள வேண்டும். அதுவும் அவருடைய நேரமான காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் தான் வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை ஆலயத்தில் செய்ய வேண்டும். அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அப்படி செல்லும்பொழுது ஆஞ்சநேயருக்கு துளசி மாலையும் செந்தூரமும் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் செந்தூரத்தையும் துளசி மாலையும் அவருக்கு வழங்க வேண்டும். இப்படி வழங்கி அவருடைய பாதத்தில் நம்முடைய நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் சமர்ப்பித்து விட்டு 11 முறை அவரை வலம் வர வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நிலம் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

- Advertisement -

ஒன்பதாவது வாரம் அவருக்கு மிகவும் பிடித்தமான தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக படைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் துளசி செந்தூரம் இவை இரண்டையும் ஆஞ்சநேயருக்கு வழங்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது .இப்படி செய்வதன் மூலம் நவகிரகங்களால் ஏற்பட்ட நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நிலத்தை விற்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் நல்ல விலைக்கு விற்பார்கள். பிறர் அபகரித்த நிலமும் நம்மை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: விரும்பிய வேலையை கிடைக்கச் செய்யும் நிர்மால்ய பூக்கள்

நிலம் தொடர்பாக எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தையும் படிப்படியாக நீக்கும் சக்தி வாய்ந்த கடவுளாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். முழு நம்பிக்கையுடன் அவரின் பொற்பாதங்களில் சரணடைந்தோர்களின் பிரச்சினைகள் முழுமையாக நீங்கும்.

- Advertisement -