விரும்பிய வேலையை கிடைக்கச் செய்யும் நிர்மால்ய பூக்கள்

job pariharam
- Advertisement -

இன்றைய காலத்தில் இருக்கும் மாணவச் செல்வங்கள் தாங்கள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கேற்றார் போல் படிப்பை தேர்வு செய்து படிப்பார்கள். படித்த அனைவரும் தாங்கள் விரும்பிய வேலையை பெறுகிறார்களா என்று கேட்டால் இல்லை என்பது தான் 90% மாணவர்களின் பதிலாக இருக்கும். தாங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் வீட்டில் சும்மா இருக்கவும் முடியாமல் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று கஷ்டப்படுபவர்களும் விரும்பிய வேலை கிடைக்க வேண்டும் என்று கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்தால் தாங்கள் விரும்பிய வேலை கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஏதாவது ஒரு ரூபத்தில் அனைவரும் தெய்வ வழிபாடு என்பதை மேற்கொள்ள தான் செய்கிறோம். பலர் அதற்காக கோவிலுக்கு செல்வார்கள். பலர் வீட்டிலேயே இருந்து பூஜை செய்வார்கள். இன்னும் சிலரோ மனதிற்குள் ஆத்மார்த்தமாக நினைத்து பூஜை செய்வார்கள். எப்படி செய்தாலும் கடவுளை மனதார நினைத்தால் அதற்குரிய பலனை நம்மால் கண்டிப்பாக அடைய முடியும்.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு பரிகாரங்களும் வழிபாடும் தீர்வாக விளங்கும். அந்த வகையில் பிடித்த நல்ல வேலை கிடைக்க செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பரிகாரத்தை எந்த நாள் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக வேலை தேடுபவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

தங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து தேர்வு செய்து கொண்டால் போதும். அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள். சிவன், விஷ்ணு, அம்மன், பிள்ளையார், முருகர் என்று எந்த கோவிலாக இருந்தாலும் பரவாயில்லை. பாடல் பெற்ற ஸ்தலமாக அதாவது பழங்கால கோவிலாக பார்த்து செல்ல வேண்டும். கோவில் நடை திறக்கும் பொழுதே கோவிலுக்கு சென்று விட வேண்டும்.

- Advertisement -

எப்பொழுதும் கோவிலில் முதல் நாள் அலங்காரம் செய்து ஆராதனை காட்டிய பிறகு தான் நடையை சாத்துவார்கள். மறுநாள் காலையில் வந்து நடையை திறந்து அந்த அலங்காரங்கள் அனைத்தையும் கழைத்துவிட்டு அபிஷேகம் செய்து புதிதாக அலங்காரம் செய்வார்கள். அவ்வாறு செய்யும் பொழுது முதல் நாள் சாற்றிய மாலைகளை ஐயரிடம் கூறி வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த மலர்களை தான் நாம் நிர்மால்ய மலர்கள் என்று கூறுகிறோம்.

இந்த மலர்களை வாங்கி வந்து புனிதமான நதிகளில் போட வேண்டும். அதாவது ஓடும் தண்ணீரில் அசுத்தம் ஏதும் இல்லாத இடத்தில் இந்த பூக்களை போட வேண்டும். அவ்வாறு போடும் பொழுது தங்களுக்கு நிரந்தரமான நல்ல மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நாளை மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பான முறையில் விரும்பிய வேலையை பெற முடியும்.

- Advertisement -