கெட்ட சக்தி வீட்டை நெருங்காமல் இருக்க பரிகாரம்

vasal1
- Advertisement -

நம்முடைய வீடு லக்ஷ்மி கடாட்சமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள், காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே வாசலைக் கூட்டி தண்ணீர் தெளித்து கோலம் போட வேண்டும் என்ற வழக்கத்தை நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். இப்படி இந்த தண்ணீர் தெளித்து கோலம் போடுவதற்கு பின்னால் நிறைய தாத்பரியங்கள் இருக்கின்றன.

அரிசி மாவில் கோலம் போட்டால் ஈ எரும்புகளுக்கு உணவாக இருக்கும். லட்சுமி கடாட்சம் பெருகும் என்று நமக்கு தெரியும். ஆனால் இப்படி தினமும் காலையில் வாசல் தெளிக்கும் தண்ணீரை வெறும் தண்ணீராக தெளிப்பதற்கு பதில், அதில் ஏதாவது ஒரு பொருளை கலந்து தெளித்தால் இரட்டிப்பு பலன் நமக்கு கிடைக்கும் அல்லவா.

- Advertisement -

தினமும் வீட்டு வாசலில் தண்ணீரை தெளிப்பதன் மூலம் நம் வீடு பாதுகாப்பு கவசத்தோடு இருக்க வேண்டும் என்றால், இந்த வாசல் தெளிக்கும் தண்ணீரில் நாம் எந்த பொருளை சேர்க்க வேண்டும். தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

நிலைவாசல் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் குமட்டிக்காய். இது சித்தர்களுடைய மூலிகை என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த காலத்தில் இந்த காயை பல மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தார்கள். இந்த குமட்டிக்காய்க்கு எதிர்மறை ஆற்றலை எதிர்த்து போராடும் சக்தி இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இது பார்ப்பதற்கு குட்டி தர்பூசணி போல இருக்கும். இந்த சின்ன காயை நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் கிராமப்புறங்களில் கொடி போல இது படர்ந்து கிடக்கும். இது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த காயை பரிகாரத்திற்கு எப்படி பயன்படுத்த போகின்றோம்.

ஒரு காயை எடுத்து நன்றாக நசுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் போட்டிடுங்க. அந்த காயில் இருக்கும் சாறு எல்லாம் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். மறுநாள் காலை எழுந்து வாசல் தெளிக்கும் தண்ணீரில், இந்த காய் ஊறிக் கொண்டிருக்கும் தண்ணீரை மட்டும் வடிகட்டி ஊற்றி கலந்து இந்த தண்ணீரைக் கொண்டு வாசல் தெளித்தால் உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு எதிர்மறை சக்தியும் நுழையாது என்பது நம்பிக்கை. இதை வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை மட்டும் செய்தால் கூட போதும்.

- Advertisement -

இது மட்டுமல்ல உங்களுக்கு இன்னொரு ஒரு அறிய தகவலும் இந்த பதிவில் இருக்கிறது. பொதுவாகவே வீட்டில் மூதேவி விலக வேண்டும் என்றால் கோமாதாவின் கோமியத்தை தானே தெளிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் உங்க வீட்டில் துர்சக்தி நடமாட்டம் இருக்கிறது. இதோ ஒரு கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தி உலாவுவதாக உணர்கிறீர்கள்.

பேய் பிசாசு ஆவி இருக்கிறது என்ற பயம் கூட நம்மில் நிறைய பேருக்கு சில நேரம் வரும். அந்த பயத்தை போக்க ஒரு கழுதையின் கோமியத்தைக் கொண்டு வந்து வீட்டில் தெளித்து பாருங்கள். அந்த துர் சக்தியானது வெளியே ஓடிவிடும். தொடர்ந்து 48 நாட்கள் கழுதை கோமியத்தை வீட்டில் தெளித்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் கெட்ட சக்தியால் தங்கவே முடியாது.

பெரும்பாலும் இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் இதுவும் நமக்கு சில பிரபல ஜோதிடர்களால் சொல்லப்பட்ட பரிகாரம்தான். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். என்னைப்பார் யோகம் வரும் என்று கழுதை படத்தை மாட்டியதற்கு பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது அல்லவா.

இதையும் படிக்கலாமே: வருமானம் தரும் குபேர மூலிகை

ஆகவே கழுதையும் நமக்கு யோகம் தரக்கூடிய ஒரு உயிரினம் தான். புது வீடு குடி போறீங்க. பழைய வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கீங்க. அந்த வீட்டில் உங்களுக்கு இப்படி சந்தேகம் பயம் இருந்தால் கூட இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -