வருமானம் தரும் குபேர மூலிகை

thayathu
- Advertisement -

எல்லோருக்குமே பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கஷ்டம் இருக்கிறது. அந்த குபேர கடாட்சம் கொஞ்சம் கிடைத்தால் எங்களுடைய பணக்கஷ்டமும் தீரும் என்று எதிர்பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதில் இன்று நாம் பார்க்கக்கூடிய பரிகாரம் பிரத்தியேகமாக ஆண்களுக்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரம்.

ஆண்கள் குபேரரது மூலிகை என்று சொல்லப்படும் இந்த வேரை தாயத்தில் போட்டு அணிந்து கொண்டால் உங்கள் பண பிரச்சினை எல்லாம் ஒரு சில நாட்களில் விரைவாக தீரும் என்பது நம்பிக்கை. உங்களுடைய பண பிரச்சனையை தீர்க்கப் போகும் அந்த குபேர மூலிகை என்ன. அதை முறைப்படி எப்படி கழுத்தில் அணிந்து கொள்ளலாம் என்பதை பற்றிய விரிவான தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பண பிரச்சனையை தீர்க்கும் குபேர மூலிகை

வெள்ளருக்கு வேர். இதைத்தான் குபேர மூலிகை என்று சொல்கிறார்கள். வெள்ளருக்கு செடியிலிருந்து எடுக்கக்கூடிய இந்த வேர் கிராமப்புறங்களில் சுலபமாக நமக்கு கிடைத்துவிடும். நீங்களே உங்கள் கையால் இந்த வேரை எடுக்கலாம். இந்தச் செடி இருக்கும் இடத்தில் வடக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய வேரை எடுக்க வேண்டும்.

வடக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வெள்ளருக்கு வேர் குபேரருக்கே உண்டான மூலிகை என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எடுத்து அந்த மண்ணையெல்லாம் தட்டி விட்டு தண்ணீரில் கழுவி சிறிது நேரம் உலர வைத்து விடுங்கள். வேரில் தண்ணீர் இருக்கக் கூடாது. பிறகு ஒரு தாயத்து வாங்கிக்கோங்க. வெள்ளி தாயத்தில் போட்டால் சிறப்பு.

- Advertisement -

வெள்ளி தாயத்து வாங்க முடியாது என்பவர்கள் நாட்டு மருந்து கடைகளில் சாதாரண தாயத்து கிடைக்கும் அதை வாங்கி அந்த தாயத்துக்கு உள்ளே இந்த வேரை போட்டு அந்த தாயத்துக்குள் கொஞ்சம் விபூதி போட்டு மூடி ஒரு கயிறு கட்டி ஆண்கள் இதை இடுப்பில் அரணாக்கயிறுடன் கட்டிக் கொள்ளலாம்.

தவறு கிடையாது. பெண்கள் இதை கட்டக்கூடாது. நீங்கள் பெண்களாக இருக்கிறீர்கள் உங்களுக்கு பணம் வசியம் தேவை என்றால் இந்த தாயத்தை பூஜையறையில் வைத்து தான் வழிபாடு செய்ய வேண்டும். ஆண்கள் இந்த தாயத்தை தங்களுடைய இடுப்பில் கட்டிக் கொண்டால் ஒரு சில நாட்களில் அவர்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த வேர் கிடைப்பதில் மட்டும் தான் உங்களுக்கு சிரமம் இருக்கும்க். பெரியவர்கள் யாராவது இருந்தால் அவர்களை கூட்டி சென்று வெள்ளெருக்கு செடி வேர் பிடுங்கி எடுங்கள். அந்த வேரை கொஞ்சம் ஜாக்கிரதையாக எடுத்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: சாபம், தோஷம், மன பயம் நீங்க வாராகி மந்திரம்

ஏனென்றால் எருக்கஞ்செடி இருக்கும் இடங்களில் விஷஜந்துக்களும் உலாவிக் கொண்டிருக்கும் என்று சொல்லுவார்கள். ஜாக்கிரதையாக இந்த வேரை எடுத்து தாயத்தில் மாட்டிக் கொண்டீர்கள் என்றால் அன்றிலிருந்து உங்களுக்கு குபேரரின் அனுகிரகம் கிடைத்துக் கொண்டே இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -