நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால் வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் காலடி எடுத்து வைக்காது.

nilavasal
- Advertisement -

நம்முடைய வீட்டிற்குள் நல்ல சக்தி நுழைவதாக இருந்தாலும், அது நிலை வாசலின் வழியாகத்தான் உள்ளே நுழையும். கெட்ட சக்தி நுழைவதாக இருந்தாலும் அது நிலை வாசலின் வழியாகத்தான் வீட்டிற்குள் வர வேண்டும். ஆகவே நிலை வாசலை எப்போதும் மங்களகரமாக வைத்துக் கொண்டால் அது மகாலட்சுமி கடாட்சத்தை வரவேற்கும். கெட்ட சக்தி உள்ளே வராமல் இருக்க வேண்டும் என்றால் சில பாதுகாப்பு விஷயங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஒரு சில வழிகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நிலைவாசல் படி, நிலை வாசல் கதவை எப்போதும் சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து நிலை வாசலில் மாக்கோலம் இட்டிருந்தால் நல்ல சக்தி தானாக விரும்பி நம் வீட்டிற்குள் வரும். இது தவிர வீட்டில் கண் திருஷ்டி, கெட்ட சக்தி நுழையாமல் இருக்க படிகார கல், வெள்ளெருக்கன் கட்டை போன்ற பொருட்களை வாங்கி கட்டி வைக்கலாம். சில பேர் கற்றாழையை கூட நிலை வாசலில் கட்டி தொங்க விடுவார்கள். அது அவரவர் சௌகரியம். உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதை வாங்கி நிலை வாசல் படியில் கட்டி வையுங்கள். இவை அனைத்தும் வீட்டிற்கு மங்களகரத்தை கொடுக்கக் கூடிய சின்ன சின்ன பரிகார குறிப்புகள். இதோடு சேர்த்து வீட்டிற்கு நன்மையை தரப்போகும் மற்றொரு குறிப்பையும் கடைபிடிக்க வேண்டும்.

- Advertisement -

தினம்தோறும் கட்டாயமாக வீட்டில் இருக்கும் பெண்கள் நிலை வாசலைக் கூட்டி தண்ணீர் தெளிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அந்தத் தண்ணீரில் சுக்குப்பொடி அல்லது இஞ்சி சாறு கலக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களில் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். சுக்கு, பொடியாகவே கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால், 1 பக்கெட் தண்ணீரில், 1 ஸ்பூன் அளவு சுக்கு பொடியை போட்டு கலந்து வாசல் தெளித்து விட வேண்டும். பின்பு எப்போதும் போல கோலம் போட்டுக் கொள்ளலாம்.

அப்படி இல்லை என்றால் சிறிய துண்டு இஞ்சியை நன்றாக நசுக்கி, அந்த வாசல் தெளிக்கும் தண்ணீரில் போட்டு, இஞ்சி சாறு அந்த தண்ணீரில் இறங்கியதும், இஞ்சி சாறு வாசம் நிறைந்த தண்ணீரில் வாசல் தெளித்து விடுங்கள். இஞ்சிக்கும் சுக்குக்கும் எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை கூட அழிக்கும் சக்தி இந்த இரண்டு பொருளுக்கு உண்டு. ஆகவே உங்களுடைய வீட்டிற்குள் எந்த ஒரு துர் சக்தியாலும் நுழைய முடியாது.

- Advertisement -

தாந்திரீக ரீதியாக இந்த பரிகாரத்தை செய்து வருபவர்கள். வீடு பாதுகாப்பு கவசத்திற்குள் இருக்கும். சில பேரால் வாசல் தெளிக்க முடியாது‌. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஒரு சிறிய கப்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அந்த தண்ணீரில் சிறிதளவு சுக்கு பொடி அல்லது இஞ்சி சாறை கலந்து அந்த தண்ணீரை தெளித்து மாப் போட்டு கூட துடைத்துக் கொள்ளலாம். நிலைவாசல் படி, நிலை வாசலுக்கு வெளியே இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த தண்ணீர் படும்படி நன்றாக துடைத்து விடுங்கள்.

காலையில் எழுந்ததுமே முதல் வேலையாக இதை செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் உங்களுடைய வீட்டிற்குள் கண் திருஷ்டியோ, கெட்ட சக்தியோ, அல்லது பில்லி சூனியம் ஏவல் போன்ற பாதிப்புகளோ நெருங்கவே முடியாது. நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -