நிலை வாசலில் இந்த ஒரு தவறை மட்டும் செய்யவே செய்யாதிங்க. வீட்டிற்குள் கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் இதுதான்.

door-vasal-lakshmi
- Advertisement -

நிலை வாசலின் முன்பு எந்த பொருட்களை நாம் வைக்கவே கூடாது என்பதைப் பற்றியும், நிலை வாசலுக்கு உள்ளே முக்கியமாக, நாம் எந்த ஒரு படத்தை வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் தடையில்லாமல் வரும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எளிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்பை கடைபிடித்து பாருங்கள். நிச்சயமாக ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம், மன கஷ்டம், கடன் சுமை எல்லாம் படிப்படியாக குறைவதை கண்கூடாக காணலாம்.

நிலை வாசலில் வைக்க கூடாத பொருள்
நாம் எல்லோருக்குமே நன்றாக தெரியும். நிலை வாசலுக்கு முன்பு செருப்பை விடக்கூடாது என்று. ஆனால் இடம் இல்லை. வேறு வழியில்லை என்ற காரணத்தால் நிலை வாசலுக்கு முன்பாகவே வீட்டில் இருப்பவர்களுடைய செருப்பை விட்டு வைக்கின்றோம். இது மிகப்பெரிய தவறு. நிலை வாசலுக்கு வெளியில் தான் செருப்பை கழட்டி விட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உங்களுக்கு இருந்தால், செருப்பை வைப்பதற்கு வேறு சரியான இடம் இல்லை என்றால், மூடி போட்டு இருக்க கூடிய ஏதாவது ஒரு அலமாரியை நிலை வாசலில் வையுங்கள். செருப்பு வெளியே தெரியாத அளவிற்கு அலமாரிக்குள் வைத்து மூடிவிட வேண்டும். அப்போது வாசலில் வைக்கக்கூடிய செருப்பினால் நம் குடும்பத்திற்கு எந்த ஒரு தோஷமும் ஏற்படாது.

- Advertisement -

அதைவிடுத்து, எல்லா செருப்பும் வீட்டிற்குள் நுழையும் போதே அப்படியே கும்பலாக கிடப்பது நிச்சயமாக வீட்டிற்கு நேர்மறை அதிர்வலைகளை கொடுக்கவே கொடுக்காது. எவ்வளவோ வீட்டுக்குள் அலங்காரம் செய்ய செலவு செய்கின்றோம். வீட்டிற்கு வெளியே, மூடி போட்டபடி ஒரு கப்போர்ட் செய்வதில் நாம் குறைந்து போக போவது கிடையாது. எல்லோருடைய வீட்டிலும் செருப்பு வைப்பதற்கு இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து பாருங்கள். நேர்மறை ஆற்றல் உங்களுடைய வீட்டில் நிறைவாக இருக்கும். (எங்களால இப்படி கப்போர்டு எல்லாம் செய்து வைக்க முடியாது, என்பவர்கள் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் உள்ளே செருப்பை போட்டு ஒரு துணியை மேலே போட்டு மூடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு அட்டை பெட்டிக்கு உள்ளே செருப்பை போட்டு மூடி வைக்கலாம். தவறே கிடையாது.)

ஒரு வீடு நிறைவான சந்தோஷத்தை பெற வேண்டுமென்றால், அதற்கு கிரக லட்சுமியின் ஆசிர்வாதம் ரொம்ப ரொம்ப அவசியம் தேவை. பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் கிரகலட்சுமி திருஉருவ படம் இருக்காது. ஆனால் எல்லோர் வீட்டிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய சுவாமி படங்களின் வரிசையில் இந்த கிரக லட்சுமியின் திருவுருவப்படமும் ஒன்று.

- Advertisement -

கிரகலட்சுமி திருவுருவ படத்தை வாங்கி வீட்டிற்குள் நிலை வாசலுக்கு மேலே, கிரகலட்சுமி வீட்டிற்குள் நுழைவது போல அந்த திருவுருவப்படத்தை மாட்டி வைக்க வேண்டும். நீங்கள் வீட்டிலிருந்து தினமும் வெளியே கிளம்பும்போது அந்த கிரக லட்சுமியை தரிசனம் செய்துவிட்டு, வணங்கி விட்டு வேலைக்கு சென்றால் உங்களுடைய வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல காரியங்கள் எல்லாம் தடை படாமல் நடக்க தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமையில் இந்த பொருளை ஒரு கைப்பிடி மட்டும் எடுத்து வைத்தால் போதும், உங்களை பிடித்திருக்கும் பிணி, பீடை, தரித்திரம் எல்லாம் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் அதிசயம் நடக்கும்.

இப்படி நிலை வாசலுக்கு மேலே மாட்டிற்கு கூடிய, இந்த கிரக லட்சுமியின் திருவுருவப்படத்திற்கு தினமும் ஊதுவத்தி காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வீட்டில் வாஸ்து ரீதியாக ஏதாவது பிரச்சனை இருந்தால் கூட அந்த பிரச்சனைகளை எல்லாம், தோஷங்களை எல்லாம் இந்த ஒரு கிரகலட்சுமி திருவுருவப்படம் நிவர்த்தி செய்து விடும். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்பவர்களுக்கு கை மேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -